districts

img

வாடகைக்கு இயங்கும் தனியார் வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை, ஜூலை 10- சட்டவிரோதமாக வாடகைக்கு இயங்கும் தனியார் வாக னங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் வாடகை  வாகன ஓட்டுநர்கள் செவ்வாயன்று மனு அளித்தனர். உடுமலை பகுதி வாடகை வாகன ஓட்டுநர்கள் செவ்வா யன்று வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, உடுமலை பகுதியில் தமிழ் நாடு  அரசின் போக்குவரத்து சட்டப்படி அரசுக்கு முறையான வரி  செலுத்தி வாடகைக்கு வாகனங்களை இயக்கி வருகிறோம்.  இந்நிலையில், சிலர் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய வாக னங்களை வாடகைக்கு இயக்குகின்றனர். இதனால் முறை யாக வரி செலுத்தி வாடகை வாகனங்களை இயக்கும் ஓட்டு னர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தனியார்  வாகனங்களை வாடகைக்கு ஓட்டும் நபர்கள் மற்றும் வாக னங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூறப்பட்டுள்ளது.