உடுமலை, ஜூன் 25- உடுமலை அரசு மருத்து வமனையில் மூலிகை தோட்டம் அமைக்க வேண் டும் என நோயாளர் நலச்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. உடுமலை அரசு மருத்து வமனையில் நடைமுறைப் படுத்த வேண்டிய வேலை கள் குறித்து நோயாளர் நல சங்கத்தின் கூட்டம் திங்கட்கி ழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத் துவனையில் விரைவாக செய்ய வேண்டிய வேலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், முக்கியமாக மகப்பேறு அறைப் பகுதியில் நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் நோயாளி மேலங்கி வாங்கி பயன் படுத்த அரசின் அனுமதி பெறவும், மருத்துவ மனை அறுவை அரங்கு ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் அறுவை அரங்கு உடைகள் வாங்கவும், மருத்துவ மனை வளாகத்தில் வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும். மேலும் வளாகத்தில் மூலிகை தோட்டம் மற்றும் பயன் தரும் மரங் களை அமைக்க வேண்டும். மருத்துவமனை துணிகளை துவைக்க பெரிய சலவை இயந் திரங்கள் வாங்க வேண்டும். மருத்துவமனை முழுவதும் சுத்தம் செய்து வர்ணம் அடிக்க வேண்டும். பழுது ஏற்பட்ட மின் சாதனங்களை சரி செய்ய வேண்டும். உயிரி மருத்துவ கழிவு களை விதிமுறைகளின்படி வகைப்படுத்தி சேகரித்து அப்புறபடுத்த தேவையான பயோ மெடிக்கல் பின்ஸ் மற்றும் கவர்ஸ் ஆகிய வற்றை வாங்க வேண்டும். தேசிய தர சான்று பெறுவதற்கு தேவையான ஆவணங்களை பராமரிப்பிற்காக பதிவேடுகள் மற்றும் கம்ப் யூட்டர் சீட் வாங்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக உடுமலை வருவாய் கோட் டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமை மருத்து வர் கலைச்செல்வி மற்றும் சமூக ஆர்வல ர்கள் சண்முகசுந்தரம், ரவி மற்றும் ஸ்டார் ரோட்டரி சங்க நிர்வாகி விஸ்வநாதன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.