districts

img

பிரியங்காநகரில் முழுநேர நியாயவிலை கடை அமைக்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 30- திருப்பூர் மாநகராட்சி பிரியங்கா நகர் பகுதியில் முழுநேர நியாயவி லைக் கடை கட்டித்தர வேண்டும் என்று  அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். இது குறித்து பிரியங்கா நகர் பகுதி  மக்கள் கூறுகையில், திருப்பூர் மாநக ராட்சி 1 ஆவது வார்டு பிரியங்கா நகரில்  900திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  550க்கும் மேற்பட்ட ரேசன் அட்டைதாரர் கள் உள்ளனர். இங்கு நியாய விலை கடைக்கு சொந்தக் கட்டிடம் இல்லை. வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகி றது. இந்த கடை வாரத்தில் மூன்று நாட் கள் மட்டுமே இயங்கி வந்தது. பொது மக்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று தற் போது வாரத்திற்கு நான்கு நாட்கள் இயங்கி வருகிறது. பெரும்பாலும் பனி யன் தொழிலாளர்களே இப்பகுதியில் நிறைந்திருப்பதால், பகுதி நேர நியாய  விலைக்கடையில் குறித்த நேரத்தில்  பொருட்கள் வாங்க முடிவதில்லை. எனவே சொந்தக் கட்டிடம் கட்டி முழு  நேர கடையாக செயல்படுத்தினால் தான் இப்பகுதி மக்கள் பயனடைய முடி யும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குமரன் காலனி கிளைச்  செயலாளர் கே‌.ராஜாமணி கூறியதா வது, இப்பகுதியில் தற்போது குடியிருப் புகள் அதிகரித்து ரேசன் அட்டைதாரர் கள் அதிகரித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்த  பின்பே, வாரத்தில் நான்கு நாட்கள் கடை  இயங்குகிறது. முழு நேரக் கடையாக  மாற்றினால்தான் அனைவரும் பயன டைவார்கள். இது குறித்து திருப்பூர்  நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராய னிடம் கோரியுள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நியாய விலை கடை கட்டிடம் கட்ட நடவடிக்கை  மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள் ளார், என்றார்.