தருமபுரி, ஜூலை 10- ஊட்டமலை அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே உள்ள கிராமம் ஊட்டமலை. இங்கு செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 120க்கும் மேற்பட்ட குழந் தைகள் கல்வி பயின்று வருகின்றனர். நாள்தோறும் சாலைகளை கடந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்ற னர். ஒகேனக்கல் - அஞ்செட்டி சாலையில், ஊட்டமலை அமைந்துள்ளதால் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் செல்லும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையை கடக்கின்றன. அப்போது குழந்தைகள் சாலையை கடப்ப தற்கு அவதிப்படுகின்றனர். மேலும், வாகனங்கள் வேக மாக வரும் சூழலில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளி அருகே சாலையின் இருபுறமும் வேகக் தடை அமைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற் றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சா லைத்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மட்டுமின்றி பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை அலுவ லகத்தில் நேரில் சென்று பலமுறை கூறியும், மனுக்கள் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்கும் போது, பள்ளி குழந்தைகள் சாலையை கடந்து செல்வ தற்கு வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.