districts

img

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை

தருமபுரி, ஆக.27- ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய அரசு குடியி ருப்பிற்கு செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடுத்து, பழைய அரசு குடியிருப்பிற்கு செல்லும் வழியில் அவ்வை நகர் உள்ளது. இந்த பழைய அரசு குடியிருப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். அரசு குடியிருப்பிற்கு செல்லவும், அவ்வை நகருக்கு செல்லும் இணைப்பு சாலையில் உள்ள மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய் உடைந்து தற்போது பள்ளம் ஏற்பட்டுள்ளது. இத னால் நடந்து செல்வோர் சில நேரங்களில் பள்ளத்திற்குள் விழும் நிலை உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் நின்று குழி தெரியாமல் இருசக்கர வாகனம், கார்கள் விபத்துக்குள் ளாகின்றன. சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள இப்பகு தியில் உள்ள மக்கள், இந்த சாலையைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பல மாதங்களாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.