districts

img

தரமற்ற தரையை சீரமைக்க கோரிக்கை

தருமபுரி, நவ.8- தரமற்ற பணியின் காரணமாக, கான்கிரீட் தரை சேதம டைந்து செடிகள் முளைத்துள்ள நிலையில், விரைந்து சீர மைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், கடகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சோழ ராயன் ஏரிக்கரை அருகே, ஈமச்சடங்கு செய்வதற்கு தண்ணீர்  தொட்டி மற்றும் களம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டாருடன், ஈமச்சடங்கு செய்வதற்கான தண்ணீர் தொட்டி  மற்றும் கான்கிரீட் களம் உள்ளிட்டவை கடந்த ஆறு மாதத் திற்கு முன், கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், அங்கு செய்யப் பட்ட பணிகள் தரம் குறைந்து பெயரளவுக்கு மட்டுமே செய் யப்பட்டது. இதன் காரணமாக, சுற்றுசுவர் மற்றும் கான்கிரீட் களத்தின் தரை உள்ளிட்டவை உடைந்து சேதமாகியுள்ளன. மேலும், அதில் புற்கள், செடிகள் முளைத்துள்ளன. இதனால் கான்கிரீட் களம் முழுவதும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள் ளது. பொதுமக்களின் தேவை கருதி, அரசு ஒதுக்கீடு செய்யப் படும் நிதி மூலம், லாப நோக்கத்திற்காக செய்யாமல், தர மான முறையில் பணி செய்ய வேண்டும். மேலும், தற்போது சேதமாகியுள்ள கான்கிரீட் தரையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.