உடுமலை, டிச.29- உடுமலை அருகே வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டு, சேத மடைந்து காணப்படும் வீடுகளை சீரமைத்து, வீடில்லா ஏழை மக்க ளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள மருள்பட்டியில், கடந்த 1994 ஆம் ஆண்டு, வீட்டு வசதி வாரியத்தால் 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 300 வீடுகள் கட்டப்பட்டன. ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் வீடுக ளும், மேல்நிலைத்தொட்டி உட்பட கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத் தப்பட்டன. களிமண் பகுதியில் பெயரளவிற்கு கட்டப்பட்ட வீடு களை ஏலம் விடும் போது சிக்கல் ஏற்பட்டது. மேலும், இந்த குடியி ருப்பு பகுதிக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை. தரமில் லாத கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வீடுகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் 300 வீடுகளும் காட்சிப் பொருளாக மாறியதால், 20 ஏக்கர் பரப்பில் அமைந்த குடியிருப்பு வளா கம் முழுவதும் பராமரிப்பின்றி புதர் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த 2012 குடியி ருப்புப் பகுதியில் உள்ள வீடுகளை ஏலம் விட முயற்சி மேற்கொள்ளப் பட்டது. புதிய ஏலம் விடும் முயற்சி போதிய பலனளிக்காத நிலையில், குடியிருப்பு வளாகத்தில் முறை யான பாதுகாப்புகளை ஏற்படுத்தா மல் அப்படியே விட்டு சென்றனர். இதனால் கட்டப்பட்ட வீடுகளில் இருந்த ஜன்னல், கதவுகள் உள் ளிட்ட பொருட்கள் களவு போக துவங்கின. தற்போது வீட்டின் சுவர்கள் மட்டுமே காணப்படுகி றது. புதர்மண்டி இடிந்து கிடக்கும் வீடுகளில் சமூக விரோத செயல் கள் தொடர்ந்து நடைபெற்று வருகி றது. மேலும், பல்வேறு பகுதிகளி லிருந்து கழிவுகள் எடுத்து வந்து கொட்டப்பட்டும் இடமாகவும் மாறி வருகிறது. ஏற்கனவே, இப்பகுதி யில் வீட்டுமனைகள் கேட்டு ஏழை விவ சாயத் தொழிலளர்கள் வருவாய்த் துறையினரிடம் மனு அளித்து, தகு தியானவர்களுக்கு இந்த இடத்தை தர வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பல நூறு வீடுகள் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளன. சிறிய வீட்டில் 10க்கும் மேற்பட்ட உழைக்கும் மக்கள் வசித்து வரும் நிலையில், சேதமடைந்து காணப் படும் இந்த வீடுகளை சீரமைத்து வீடில்லா மக்களுக்கு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.