உடுமலை, ஜூலை 9- உடுமலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என உடுமலை வியாபா ரிகள் சங்கத்தினர் செவ்வாயன்று நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளார் கள். உடுமலை நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபம் மற்றும் கூட்டுறவு வங்கி இருக்கும் பசுபதி வீதி போக்குவரத்து அதிகம் இருக்கும் தளி பாதையை இணைக்கும் முக்கிய சாலை. இந்த வீதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு வரும் நபர்களின் அருவருக்கத்தக்க செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருப்பதால், வணிகவ ளாகதிற்கு மக்கள் வருவதில்லை. மேலும், வீதி முழுவதும் திறந்தவெளி மதுபான கூட மாக மாறி உள்ளது. இதே போல் உடுமலை ராஜேந்திர சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடை இருக்கும் பகுதியில் அரசு நடுநிலை பள்ளிகள், போட்டி தேர்வு எழுதும் மாணவர்க ளுக்கு இலவச வகுப்புகள், சுகாதார அலுவல கம், கேந்திரிய வித்யாலயா பள்ளி, மருத்து வமனை, விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்யும் சந்தை மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்டவைகள் உள்ளது. நகரின் முக்கியமான இந்த வீதியில் இருக்கும் டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகில் இருக்கும் அண்ணா பூங்காவும் குடிமகன்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதால் பூங்கா செயல்படாமல் உள்ளது. இப்படி பொது மக்களுக்கு விரோதமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடி யாக அகற்ற வேண்டும் என்று உடுமலை வியாபாரிகள் சங்கத்தினர் நகர்மன்றத் தலைவ ரிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். மனுவைப் பெற்றுக் கொண்ட நகர்மன்றத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி இன் னும் சில நாட்களில் கடையை அகற்ற ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். உடுமலை நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடை களை அகற்ற வேண்டும் என உடுமலை நகர மன்றத்தின் முதல் கூட்டத்தில் இருந்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டு இன்று வரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் கடை சியாக 4 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தி லும் நகர்மன்ற உறுப்பினர்கள் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக் கது.