தருமபுரி, ஜூலை 6- பொது வழிப்பாதையில் வேலி அமைப்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அ.பாப்பாரப்பட்டி, பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது, தரும புரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அ.பாப்பாரப்பட்டி, பெரி யார் நகரில் 8 குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் வேளாண்மை அறிவியல் நிலைய நிலத்தின் ஓரமாக செல்லும் 12 அடி சாலையை சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன் டுத்தி வந்தோம். தற்போது வேளாண்மை அறிவியல் நிலைய மாக இருக்கும் இந்த இடம் இதற்கு முன்பு தமிழ்நாடு மாநில விதைப்பண்ணை இடமாக இருந்தது. காலங்காலமாக இந்த இடத்தை போக்குவரத்துக்காக பயண்படுத்தி வந்தோம். இந் நிலையில், தற்போது உள்ள வேளாண்மை அறிவியல் நிலை யத்தின் நிர்வாகம், நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் முள்வேலி அமைக்க முயற்சி மேற் கொண்டு வருகின்றனர். அவ்வாறு இந்த பாதையை மறித்தால் எங்களின் குழந்தை கள் பள்ளிக்கு செல்ல முடியாது. விவசாய விளை பொருட் களை சந்தைக்கு கொண்டு போக முடியாது. எனவே, பெரி யார் நகருக்கு செல்லும் இப்பாதையை வேலி கொண்டு மறிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.