சேலம், மே 21- சாயக் கழிவுகளால் சேலம் திரும ணிமுத்தாற்றில் நுரை பொங்கும் அவ லம் தொடர்ந்து நடைபெற்று வருவ தால், சாயப் பட்டறைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகி றது. இதனை பயன்படுத்திக் கொண்ட சாயப்பட்டறை உரிமையாளர்கள் அனுமதியின்றி சுத்திகரிக்கப்படாத சாய கழிவுகளை திருமணிமுத்தாற் றில் திறந்துவிட்டு வருகின்றனர். இத னால், திருமணிமுத்தாறு நுரை பொங்கி மலை போல் காட்சியளிக்கி றது. குறிப்பாக, சேலம் ஆத்துக்காடு பகுதியில் உள்ள திருமணிமுத்தாற் றில் மலைபோல் நுரை குவிந்து காட்சி யளிக்கிறது. இதன் காரணமாக, அருகில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் மாசடைந்து உள் ளதாக விவசாயிகள் வேதனை தெரி வித்துள்ளனர். மேலும், திருமணிமுத் தாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் துர் நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள் ளாகியுள்ளனர். இதனால், சாயப்பட்ட றைகளில் இருந்து ரசாயன கழிவுகளை திருமணிமுத்தாறு கலப்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடுக்க வேண் டும் என்று விவசாயிகள், சமூக ஆர் வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.