திருப்பூர், நவ.19 - மோட்டார் தொழிலையும், அந்த தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக் கான தொழிலாளர் வாழ்வையும் கடுமை யாக பாதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ ஒன்றிய அரசு கைவிடு மாறு நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேச மோட்டார் தொழிற் சங்கத்தினர் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயனிடம் கோரிக்கை மனு அளித்தனர். சாலை போக்குவரத்து மாநில சம் மேளனத் துணைத்தலைவர் ஒய்.அன்பு, அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண் டல செயலாளர் பி செல்லதுரை, திருப் பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.வி.சுகுமார், மாவட்டச் செயலாளர் எஸ்.சிவராமன், திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலா ளர் சங்க மாவட்டப் பொருளாளர் சி. பெருமாள் ஆகியோர் திருப்பூர் எம்.பி. அலுவலகத்தில் கே.சுப்பராயனை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, ஒன்றிய மோடி அரசு, பெட்ரோல், டீசல் விலை மற்றும் இன்சூ ரன்ஸ் கட்டணத்தைக் குறைக்கவும், புதிய மோட்டார் வாகனச் சட்டம் என்ற பெயரில் மோட்டார் தொழிலை அழிப் பதை தடுக்கவும், மரண விபத்திற்கு பிஎன்எஸ் 106 (1), 106 (2) சட்டப்படி 5 ஆண்டு, 10 ஆண்டு தண்டனை விதிப் பதை ரத்து செய்யவும், அநியாய சுங்கக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட வும், இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) விற்ப னையகங்களை அதிகப்படுத்தி எரிபொ ருள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வும், பொதுப் போக்குவரத்து வாகனங்க ளுக்கு சலுகை விலையில் டீசல், பெட் ரோல் கிடைப்பதை உத்தரவாதம் செய் யவும் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என எம்.பி. கே.சுப்பராயனிடம் தொழிற்சங்க நிர்வா கிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழக 40 எம்.பி.களும் ஒருமித்த குரலில் பேசி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என் றும் கேட்டுக் கொண்டனர்.