districts

விடுதி கட்டமைப்பு வசதியை மேம்படுத்த கோரிக்கை

சேலம், ஜூன் 21- இடிந்து விழும் நிலையிலுள்ள விடு திகளின் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தக் கோரி இந்திய மாணவர் சங்கத் தினர், சேலம் ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், அண்ணா பூங்கா  அருகே அரசு ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் பெண்கள் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரசு கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) பயி லும் மாணவிகள் தங்கியுள்ளனர். இந்நி லையில், விடுதியில் உள்கட்டமைப்பு  வசதி, கழிவறை வசதி போன்ற வசதி கள் போதிய அளவில் இல்லை. குறிப் பாக, மேற்கூரை மிகவும் மோசமான  நிலையில், இடிந்து விழும் தருவாயில்  உள்ளது. காலை உணவு 9 மணிக்கு மேல் தான் தயாராகிறது. கல்லூரி தொடங் கும் நேரம் காலை 9 மணி என்பதால் மாணவிகளால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல இயலவில்லை. மேலும், மாணவிகளை சமைக்க சொல் லியும், பாத்திரங்களை கழுவ சொல்லி யும் விடுதி காப்பாளர்கள் துன்புறுத்து கின்றனர். இதனால், மாணவிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. பல  மாணவிகள் காலை உணவு உண்ணா மலே கல்லூரி செல்லும் அவலநிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு இதற்கு காண வேண் டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலா ளர்கள் டார்வின், அபிராமி, மாவட்ட துணைத்தலைவர் ஆகியோர் ஆட்சிய ரகத்தில் மனு அளித்தனர்.