districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கடந்தாண்டு வழங்கிய சதவிகிதத்தில் போனஸ் வழங்க கோரிக்கை

திருப்பூர், நவ.4– கடந்தாண்டு வழங்கிய சதவிகிதத்தில் போனஸ் வழங்க  வேண்டும் என பாத்திர தொழிலாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் எல்பிஎப் பாத் திர சங்க அலுவலகத்தில் சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, ஏடிபி, காமாட்சியம்மன் சங்கம், ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து பாத்திரத் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் சனியன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் பாத்திரத் தொழிலாளர் போனஸ்  குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்படி அனைத்து பாத்திர பகுதி கூலி தொழிலாளர்களுக்கும் 2023 ஆம்  ஆண்டிற்கான போனசாக, கடந்த ஆண்டு பெற்ற சதவிகிதத் தையே பெற்றுக்கொள்ள வேண்டும், பட்டறைதாரர்களும், உற்பத்தியாளர்களும் கடந்த ஆண்டு வழங்கிய சதவிகித போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அப்படி வழங்க மறுக்கும் பட்டறை உரிமையாளர்களிடம் அனைத்து சங்கங்களும் பேசி நடவடிக்கை எடுத்து தொழி லாளர்களுக்கு போனஸ் பெற்றுத் தருவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இஸ்ரேலின் இனவெறி போர் சமாதானக் கழகம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ.5– இஸ்ரேலின் இனவெறி ஆக்கிரமிப்பு போரைக் கண்டித் தும், பச்சிளங்குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி மக் கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தி போரை  முடிவுக்குக் கொண்டு வரவும் வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சமாதான ஒருமைப் பாட்டுக் கழக மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ.வி.பழனிச் சாமி தலைமை வகித்தார். இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் பின்புலத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை,  ஆக்கிரமிப்பு போரை உடனடியாக தடுத்து நிறுத்த வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் போரை எதிர்த் தும், சமாதானத்தை வலியுறுத்தியும் சமாதான ஒருமைப்பாட் டுக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.ஜெய பால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி ஆகியோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட  அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

நடுசாலையில் பழுதாகி நின்ற பேருந்து

நாமக்கல், நவ.5- பள்ளிபாளையம் அருகே நடுசாலையில் பழுதாகி நின்ற  பேருந்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தற்போது காகித ஆலை வழியாக திருங் செங்கோடு, நாமக்கல் சென்று வருகின்றன. இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து ஒன்று, குட்டை முக்கு என்ற பகுதி அருகே சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளு டன் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டயர் பஞ்ச ராகி நடுவழியில் நின்றது. மிகவும் குறுகலான வளைவு பாதை யில் பேருந்து பழுதாகி நின்றதால், நீண்ட தூரத்திற்கு வாக னங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்தன. மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும், பேருந்தின் பழுதை சரி  செய்ய முடியாமல் ஓட்டுநரும், நடத்தினரும் தவிப்புக்குள்ளா கினர். இதனையடுத்து அருகிலிருந்த பொதுமக்களின் உதவி யுடன் பேருந்தின் முன்பக்க டயர் மாற்றப்பட்டு, அதன் பிறகு பேருந்து புறப்பட்டு சென்றது.

மாணவர்களுடன் நீச்சல் அடித்த ஆட்சியர்

திருப்பூர், நவ.5– திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக் காக நடந்த உயிர் காக்கும் நீச்சல் இலவச பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் பங்கேற்று நீச்சல் குளத்தில் மாண வர்களுடன் நீச்சல் அடித்து உற்சாகப்படுத்தி னார். திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி  சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு  உயிர் காக்கும் நீச்சல் இலவச பயிற்சி துவக்க  விழா நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் ரோட் டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க புதிய முயற்சியை மேற்கொண்டனர். இதன் மூலம் மாதந்தோ றும் அரசுப்பள்ளி மாணவர்கள் 20 பேரைத்  தேர்வு செய்து அவர்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் இலவசமாக நீச்சல்  பயிற்சி அளிக்க உள்ளனர். வேலம்பாளை யம் பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத் தில் பயிற்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் நீச்சல் பயிற்சிக்காக ஆகும் செலவை ரோட்டரி சங்கமே ஏற்றுக்கொள் கிறது. ஆண்டு முடிவில் நீச்சல் பயிற்சியில் தகுதிபெறும் மாணவர்களை, மாநில அளவி லான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க செய்ய வும் திட்டமிட்டுள்ளனர். இந்த பயிற்சி தொடக்க விழாவில் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் நீச்சல் பயிற்சியை துவக்கி வைத்து நீச்சல் குளத்தில் மாணவர்களுடன் நீச்சல் அடித்து ஊக்கமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தினார். மேலும், நீச்சல் பயிற்சிகளை முடிக்கும் மாணவர்கள் ஆபத்து காலங்களில் நீரில் மூழ்கியவர்களை  எப்படி மீட்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும், தாங்கள் நீச்சல் பழகிய தோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்ற மாணவர் களையும் நீச்சல் பழக ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திருப்பூரில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள் ஐவர் மீட்பு

திருப்பூர், நவ.5– திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வடமாநிலங்க ளைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்கியது கண்டறியப்பட்டு ஐந்து குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கே.ஜி. லேஅவுட் பகுதி யில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் குழந்தைத் தொழிலா ளர்கள் வேலை வாங்கப்படுவதாக, திருப்பூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப் படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா அறிவுறுத்தல் அடிப்படையில் சனி யன்று காலை, கொங்கு மெயின் ரோடு, கேஜி லே-அவுட் பகுதியில், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த சபாகரீம் என்பவருக்குச் சொந்தமான மசூத் டெக்ஸ் என்ற பனியன் கம்பெனியில் குழந்தைகள் உதவி மைய ஆற்றுப்படுத்துனர் வரதராஜ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் சதீஷ்குமார் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மேற்கு வங்க  மாநிலத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள், குழந்தை தொழி லாளர்களாக அங்கு தங்கவைக்கப்பட்டு வேலை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்கள் ஐவரும் மீட்கப்பட்டு  15.வேலம்பாளையத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து சிறுவர்களது பெற்றோருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு முன்பு  சிறுவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோர் வசம் ஒப்படைக் கப்படுவர் என்று குழந்தைகள் உதவி மையத்தினர் தெரிவித்த னர். மேலும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய கம்பெனி உரிமையாளர் மீது குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள் ளப்படும். மேலும் இதுபோன்று குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தால் பொதுமக்கள் குழந்தைகள் உதவி மைய எண் 1098-க்கு புகார் அளிக்கலாம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

சேலம், நவ.5- சேலம் மாநகராட்சியில் மேட்டூர், தொட்டில்பட்டி, கோம் புரான்காடு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவ தால் நான்கு நாள்களுக்கு குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் தெரி வித்துள்ளார். சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர்த் திட்டம் செயல் படும் மேட்டூர் தொட்டில்பட்டி, கோம்புரான்காடு ஆகியப் பகுதிகளில் புதிய மோட்டார், பம்புகள் பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும்  புதிய மோட்டார் பம்புகள் பொருத்துவதற்கு ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பில் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தப் புள்ளி பெறும் நிலையில் உள்ளது. இதனால் மேட்டூரில் இருந்து சேலத்திற்கு வரும் சராசரி குடிநீரின் அளவு குறைந் துள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரைத் தேவைக்கேற்ப நவ. 4 முதல் நவ. 7 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளார்.

வழக்குரைஞர் வெட்டிப் படுகொலை

நாமக்கல், நவ.5- நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக் குரைஞர் மணிகண்டன் வெள்ளியன்று இரவு வெட்டிக் கொல் லப்பட்டார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வரகூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). வழக்குரைஞரான இவர், வெள்ளியன்று இரவு எருமப்பட்டி-கஸ்தூரிபட்டி பிரிவு சாலை யில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது  அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த எருமப் பட்டி போலீசார் அங்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு நாமக்கல்அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக  அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக காவல்  ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மாட்டிறைச்சிக் கடைகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோர் ஆட்சியரிடம் கோரிக்கை

திருப்பூர், நவ.5- திருப்பூரில் மாட்டிறைச்சி கடைகள் அகற் றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு சமூக நல அமைப்பி னர் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவில் வழி அருகே முத்தணம்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் கவிதா. இவர் உட்பட 3 பேர், கடந்த 18 ஆண்டுகளாக மாட்டிறைச்சி கடை நடத்தி வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்துள்ள கடைக்கு மாற்றாக ஆதிதிராவிடர் நலத்துறையில் தாட்கோ நிதி யுதவியுடன் நிரந்தர வணிக கட்டிடம் அமைத் துக் கொடுக்க வேண்டும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால், எவ்வித முன்னறி விப்பும் இன்றி மாநகராட்சி நிர்வாகத்தினர் காவல்துறை துணையுடன் கடைகளை அப் புறப்படுத்தி வேன் மூலம் பொருட்களை எடுத் துச் சென்றுள்ளனர். இதனால் தங்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது பண் டிகை காலம் என்பதால் இதே பகுதியில் தற்கா லிக கடை அமைக்க அனுமதி வழங்க வேண் டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  விடுத்தனர். ஏற்கனவே அளித்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்களோடு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமி ழர் பேரவை, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகளும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தென் மாவட்டங்களுக்கு சூலூரில் இருந்து பேருந்துகள் புறப்படும்

கோவை, நவ.5- தென் மாவட்டங்களுக்கு சூலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படும் என போக்கு வரத்து துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்ள வர். விடுமுறை காலம் என்பதால் அதி களவிலான பயணிகள் ஒரே இடத்தில் இருந்து புறப்படும் போது, அதிக கூட் டத்தினால் பொது மக்களுக்கு சிரமம் ஏற் படும். இந்நிலையில், கோவை மாவட் டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வகை யில் போக்குவரத்துத் துறையினர் ஏற் பாடுகளை செய்து வருகின்றனர். எனவே, தென் மாவட்டங்களுக்கு செல் லும் பயணிகள் சூலூர் புதிய பேருந்து நிலையம் வர வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு ஏற்பாடுகளாக போக்குவரத்து கட்டுப் பாட்டு அறை, பேருந்துகள் நிறுத்த இடங்கள், மற்றும் பயணிகள் தங்கி செல்ல பாதுகாப்பு வசதிகள் கொண்ட அறை, அதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது. சிறப்பு பேருந்து கள் இயக்க நடவடிக்கை எடுக்கப் படும். மேலும், எந்தெந்த வழி தடங்க ளில் எவ்வளவு பேருந்துகள் இயக்கப் படும் என விரைவில் முடிவுகள் அறி விக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

வெளிமாநில தொழிலாளர்களை சுரண்டும் ஏஜெண்டுகள்: சிஐடியு கண்டனம்

ஈரோடு, நவ.5- வடமாநில தொழிலாளர்களை சுரண்டும் ஏஜெண்டு களை தடை செய்ய வேண்டும் என சிஐடியு பொது தொழி லாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு ஈரோடு மாவட்ட பொது தொழிலா ளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்க்ரீன் பிரிண் டிங், பிளீச்சிங், டையிங், ரோட்டரி பிரிண்ட் உள்ளிட்ட துணி நூல் பதனிடும் அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நடப்பு ஆண்டு போனசாக 25 விழுக்காடு வழங்க வேண்டும். தினக்கூலி ரூ.900 வழங்க வேண்டும். உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்க வழங்க வேண் டும். வைப்பு நிதி திட்டங்கள் அமலாக்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர் சட்டத்தை முறையாக அமலாக்க வேண் டும். வடமாநில தொழிலாளர்களை சுரண்டும் ஏஜென்டுகளை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட் டுள்ளது.