திருப்பூர், டிச.26- வளையபாளையம் பகுதியில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்யப்படவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்துள்ள னர். பூமலூர் பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், முன் னாள் சேர்மன், வளையபாளையம் வார்டு உறுப்பினர் மற்றும் பூமலூர் பஞ்சாயத்து நிர்வாகிகள் உட்பட பலர் செவ்வாயன்று வளையபாளையம் ஊர் பொதுமக்களை சந்தித்தனர். அப் போது அப்பகுதி மக்கள், பூமலூர் வளையபாளையம் வழி யாக பல்லடம் சோமனூர் மற்றும் திருப்பூர் செல்லும் பி9, பி18 ஆகிய பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். ஏற்க னவே உள்ள பொதுக் கழிப்பிடத்தைப் பயன்பாட்டிற்குரிய வகையில் மாற்றித் தர வேண்டும். வீதிகளில் கான்கிரீட் சாலை கள் அமைத்து தர வேண்டும். கிடாத்துறை ஆர்எல்டி முதல் வலையபாளையம் பால்வாடி வரை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த காணப்படுகிறது. அப்பகுதியில் முறையான தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். சுடுகாட்டுப் பகுதி களில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். முறை யான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வளைய பாளையம் ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த பிரச்சனைகள் முழு வதும் கூடிய விரைவில் சரி செய்யப்படவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் எனக் கூறியுள்ளனர்.