திருப்பூர், ஜன.24 - தாராபுரம் நகரத்தில் நாடார் தெருவில் உள்ள டி.சி.எம்.எஸ் கடை எண் 3-ல் 1500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருப் பதால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் காலதாமதம் ஆகிறது. எனவே பொதுமக்கள் வசதிக் காக இந்த கடையை இரண்டாகப் பிரித்து அமைக்க வேண்டும் என்று நாடார் தெரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இது தொடர்பாக தாராபுரம் நாடார் தெரு மற்றும் சுற்று வட்டார மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. கோவிந்தராஜ் தலைமையில் வெள்ளியன்று தாராபுரம் நக ராட்சி ஆணையாளர் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். பொதுமக்கள் சார்பில் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள் ளதாவது, இக்கடையின் மூலமாக 1519 குடும்ப அட்டைதாரர்க ளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு காலதாமதம் ஏற்ப டுவதுடன், வெகு தூரத்தில் இருந்து வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இங்குள்ள ரேஷன் கடையை இரு பகுதிகளுக்கு பிரித்து பொதுமக்க ளுக்கு ஏற்ற முறையில் கார்டு ஒதுக்கீடு செய்து பொருள் வினி யோகம் செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த கோரிக்கை குறித்து தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல்கள் அலுவலர் மற்றும் டிசிஎம்எஸ் நிர்வாகத்திற்கு கடையை பிரிக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத் திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மக்கள் போராட்டத்தை தவிர்க்கும் நோக்கத்தில் விரைந்து மேற்படி ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிகழ் வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் என்.கனகராஜ், மூத்த உறுப்பினர் மேகவர்ணம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.