தாராபுரம், ஜூன் 17 - தாராபுரத்தில் நடைபெற்ற சாலைப் பணியாளர் சங்கத்தின் 5 வது கோட்ட மாநாட்டில், நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறி விக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 5 வது கோட்ட மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வு தாராபுரம் பார்க் ரோட்டில் உள்ள தமிழ்கலைமன்ற அரங் கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கோட்ட தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். உட்கோட்ட செய லாளர் பாலமுருகன் வரவேற்றார். மாநில செயலாளர் செந்தில்நாதன் தொடக்க உரையாற்றினார். கோட்ட செயலாளர் இல.தில்லையப்பன் செய லாளர் அறிக்கையும், கோட்ட பொருளா ளர் முருகசாமி வரவு செலவு அறிக்கை முன் வைத்து பேசினர். இதைத்தொடர்ந்து அறிக்கையின் மீது விவாதம் நடை பெற்றது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலை வர் மா.பாலசுப்பிரமணியன் வாழ்த்தி பேசினார். இரண்டாம் நாள் நிகழ்வாக தாராபு ரம் அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சிரோடு, பெரியகடைவீதி வழியாக பேரணி நடைபெற்றது. பின் னர் அண்ணாசிலை அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாநாட்டில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்கவேண்டும். சாலைப் பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறை யிலேயே விரைந்து பணி வழங்கவேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாநாட்டில் அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் ராணி, வட்டக் கிளை தலைவர் செந்தில்கு மார், அரசு தொழிற்பயிற்சி நிலைய அலு வலர் சங்க கிளை தலைவர் எம்.மேக லிங்கம், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் கி.மேகவர் ணன், மாவட்ட இணைச்செயலாளர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். முடிவில் மாநில செயற்குழு உறுப் பினர் செல்வகுமார் நன்றி கூறினார்.