கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
உதகை, ஆக.28- பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக ளில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிக மாக காணப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கோத்தகிரி அருகே உள்ள பனஹட்டி பகுதியில் கரடி ஒன்று பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியி ருப்பு பகுதிகளில் உலா வருகிறது. இதனால், இரவு நேரங்க ளில் குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்து உள்ளனர். எனவே, வனத்துறையினர் குடியி ருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்தில் தந்தை, மகன் காயம்
நாமக்கல், ஆக. 28- பள்ளிப்பளையத்தில் மது போதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற கார் ஒட்டுநரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த வர் அருண். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் வெப்படையில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி வெள்ளை நிற சொகுசு காரை செவ்வயன்று ஓட்டி வந்துள்ளார். இரு இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஐந்து பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்றுள்ளார். இதனை கவனித்த, மற்ற வாகன ஓட்டிகள் பின்தொடர்ந்து, நிற்காமல் சென்ற காரை சுற்றி வளைத்து நிறுத்தினர். பின்னர், காரை ஓட்டி வந்த அருணை தாக்கினர். பின்னர். பள்ளிபாளையம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்த னர். போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கார் விபத்தில் வெப்படையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கோவிந்தராஜ் (45), அவருடைய 8 வயது மகன் சிறுவன் சக்திவேல் ஆகியோர் படுகாயங்களுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நூலகங்கள் வைத்திருப்போர் விருதுக்கு பெற அழைப்பு
ஈரோடு, ஆக. 28- சொந்த நூலகங்கள் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வீடு தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தி லும் வீடுகளில் நூலகங்கள் அமைத்து சிறப்பாகப் பயன்ப டுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்கு விக்க ரூ.1.14 லட்சம் மதிப்பிலான விருதுகளை அறிவித்துள் ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் சொந்த நூலகங்களுக்கு ரூ.3ஆயிரம் மதிப்பில் விருது கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங் கப்படும். விருதினைப் பெற உரிய விபரங்களுடன் அக்.14க்குள் erodedistrictlibraryoffice@gmail.com அல்லது 75983 95352 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அல்லது மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலவலகம், வீரபத்திர தெரு, ஈரோடு.3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறிப்பிடப்பட்டுள்ளது.
கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி ஒழிக்கப்படும் ஆய்வு கூட்டத்தில் தகவல்
உதகை, ஆக. 28– கட்ட பஞ்சாயத்து மற்றும் கந்து வட்டி அட்டகாசத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற, சட்டம் – ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர் பான ஆய்வு கூட்டம் புதனன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு, ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில், நீலகிரி மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாத வகை யில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி அட்ட காசம் ஆகியவற்றை ஒழிப்பது, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுப் பது, வெளி மாநில மதுபானங்களை கள்ளத்த னமாக விற்பனை செய்வதை தடுப்பது போன் றவைகள் குறித்தும், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் புழக் கத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது உள் ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக் கப்பட்டது. மேலும், விபத்துகளை குறைக் கும் வகையில் எடுக்க வேண்டிய சாலை பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், பழங்குடியின கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய பகுதிகளுக்கே சென்று பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். என, அறிவுறுத் தப்பட்டது. இக்கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தங்கவேல், சவுந்திர ராஜன், காவல் துறை துணைக் கண்காணிப் பாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பழங்குடியின மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி தீவிரம்
உதகை, ஆக.28- பந்தலூர் அருகே எருமாடு வருவாய் கிராமத்தில் வீடு வீடாக சென்று பழங்குடியின மக்களை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கும் பணியில் தீவிரமாக நடைபெற்ற வருகி றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட எருமாடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட போத்துக்கொல்லி, மங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் குறித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் உதவியாளர் கனிமொழி ஆகியோர் பழங்குடியின மக்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 30 ஆம் தேதியன்று வரை இப்பணிகள் நடை பெறும். இதனை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என தெரிவித்தனர்.
பட்டா நகல் கொடுத்து ஏமாற வேண்டாம்! மலைவாழ் மக்கள் சங்கம் அறிக்கை
திருப்பூர், ஆக.28- மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டி தருவதாக பட்டா நகல் கேட்கும் தனிநபரிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்று மலைவாழ் மக்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளரும், தளி பேரூராட்சி துணைத் தலைவருமான கோ.செல்வன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உடுமலைப்பேட்டை, ஜல்லிபட்டியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மலைவாழ் மக்களிடம் வீடு கட்டி தருவதாக பொய் சொல்லி பட்டா நகல்களை கேட்டு வருகி றார். மலைவாழ் மக்கள் யாரும் பட்டா நகலை அவரிடம் வழங்க வேண்டாம். மேலும், பட்டா நகல் தேவைப்பட்டால் உள்ளாட்சி பிரதிநிதிகளோ, அரசு அதிகாரிகளோ மக்களிடம் நேரடியாக பெற்றுக் கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கோ.செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.
அவிநாசியில் இன்று முகாம்
திருப்பூர், ஆக.28- அவிநாசி, பல்லடம், தாராபுரம் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வியாழனன்று (இன்று) “மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களுடன் முதல் வர்” திட்டத்தினை. 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிரா மங்களில் ஜூலை 16 முதல் செப்டம்பர் 13 வரை 76 இடங்க ளில் முகாம்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், திருப் பூர் மாவட்டத்தில் வியாழனன்று (இன்று) அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் செம்பியநல்லூர் செந்தூர் மஹாலில் செம்பிய நல்லூர், வேலாயுதம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் செம்மிபாளையம் கே.என். புரம் விக்னேஷ் மஹாலில் சுக்கம்பாளையம், கே.அய்யம் பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், தாராபுரம் ஊராட்சி ஒன் றியத்தில் கரையூர் ஸ்ரீசக்தி முருகன் திருமண மண்டபத்தில் மணக்கடவு, நல்லாம்பாளையம், மாம்பாடி, நாதம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஈஸ்வர செட்டிபாளையம் சமுதாயக்கூடத்தில் சடையபாளை யம், பெரியகுமாரபாளையம், மருதூர், மோளரப்பட்டி, நவ நாரி, பெல்லம்பட்டி மற்றும் முத்தியம்பட்டி ஆகிய ஊராட்சி களுக்கு முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் அந்தத்த ஊராட்சிகளில் முகாம் நடைபெறும் இடங்களில் சமந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தீர்வு காணலாம், என தெரி விக்கப்பட்டுள்ளது.
மலையை விட்டு மான்கள் இறங்காமல் இருக்க நடவடிக்கை
திருப்பூர், ஆக.28- மலையை விட்டு மான்கள் விளை நிலங்களுக்குள் இறங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஊதியூரில் வனத்துறை சார்பில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு காங்கேயம் வனச்சரக அலுவ லர் ஆர்.மௌனிகா தலைமை வகித் தார். இதில், ஊதியூர் மலையின் அடிவா ரப் பகுதியில் உள்ள தாயம்பாளையம், கொழுமங்குளி உள்ளிட்ட கிராமங்க ளில் உள்ள வயல்களில், மலையை விட்டு கீழே வரும் நூற்றுக்கும் மேற் பட்ட மான்கள் பயிர்களை மேய்ந்து, சேதப்படுத்தி வருகின்றன. இந்த மான் களை கட்டுப்படுத்துவதற்கு ஊதியூர் மலை அடிவாரத்தில் கம்பி வேலி அமைக்க வேண்டும். மேலும், மான்க ளின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க ஊதி யூர் மலையில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியு றுத்தி பேசினர். இதற்கு பதிலளித்து காங்கேயம் வனச்சரக அலுவலர் மௌனிகா பேசு கையில், ஊதியூர் வனப்பகுதியில் உள்ள மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளின் தாகம் தீர்க்க வனப் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும். மேலும், இங்கு உள்ள மான்கள் இரைதேடி மலையை விட்டு கீழே இறங்கி வராமல் தடுப்ப தற்கு கம்பி வேலி அமைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு செய்யப் படும், என்றார். இக்கூட்டத்தில் கிராம வனக்குழுத் தலைவர் கிருஷ்ணகுமார், வனக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊதி யூர் பகுதி விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பஞ்சலிங்க அருவியில் ஆய்வு
உடுமலை, ஆக.28- திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த்குமார் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்திமலை அமைந் துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரா் கோவில், நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா என பல் வேறு அம்சங்கள் உள்ளன. இந்த சுற்றுலாத் தலங்களில் அணைப் பூங்கா உருவாக்குதல் மற்றும் படகு இல்லம் செயல்படுத்துதல் குறித்து சுற்றுலாத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருமூர்த்திமலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வேண் டிய அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் அரவிந்த்குமார் ஆய்வு செய்தார். இதில், கோவில் அறங்காவலர் ரவி, அறநிலைத்துறை பணியாளர்கள், சுற்றுலா ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேட்டி, சேலை உற்பத்திக்கு அரசாணை வெளியீடு விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு வரவேற்பு
ஈரோடு, ஆக. 28- பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கான அரசா ணையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டதை தமிழ்நாடு விசைத்தறியாளர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொங்கல் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான அரசாணை செவ்வாயன்று வெளியிடப்பட் டுள்ளது. அதன்படி ஒரு கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 476 வேட்டிகள் மற்றும் ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணைப்படி வேட்டி உற்பத்தியில் 77 லட்சமும், சேலை உற்பத்தியில் 53 லட்சமும் கூடுதலாகும். அரசின் கணக்குப்படி 43 ஆயிரம் விசைத்தறிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வந்த சூழலில் தற்போது மேலும் 20 ஆயிரம் விசைத்தறிகள், ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் பயன்பெறுவர். இதனால், மகிழ்ச்சி யடைந்துள்ள விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
புகையிலை விற்ற கடைக்கு ரூ. 25000 அபராதம்
தருமபுரி, ஆக. 28- காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதி தயாரிப்பு நிறுவ னங்கள், பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் உணவு பாது காப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பொன்னேரி பகுதி அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் இருந்ததை கண்டு பிடித்து, பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடையை 15 தினங்கள் திறக்கக் கூடாது என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
சிப்காட்டிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மாசுகட்டுப்பாட்டுத்துறைக்கு வாலிபர் சங்கம் புகார்
ஈரோடு, ஆக. 28- பெருந்துறை சிப்காட்டிலிருந்து வெளியாகும் நச்சுக்காற்றினால் குழந்தைகள் பாதிக்கப்படுவதையடுத்து வாலிபர் சங்கத்தினர் சிப் காட் மாசுகாட்டுபாடு துறை அலுவலத்தில் புகார் மனு அளித்த னர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூர் கிராமம், குட்டப்பாளையம் எழுதிங்கள்பட்டியில் சுமார் 80 மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றனர். சிப்காட்டில் செயல்பட்டுவரும் ஆர்னேஷ் பயோபியூவல் கம்பனியிலிருந்து வெளியே வரும் நச்சு கற்றால் அங்குள்ள பொதுமக்கள், குழந்தைககளுக்கு அடிக்கடி மூச்சுதி ணறல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதனன்று சிப்காட் மாசுகாட்டுபாடுத் துறை அலுவலத் தில் புகார் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், தாலுகாச் செயலாளர் செ.அஜித்குமார், எழுதிங்கள் பட்டி கிளைச் செயலாளர் பிரசாந்த் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இத னைத் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் உடனே தலை யீடு செய்வதாக உறுதி அளித்தனர்.