அவிநாசி, நவ.4 - நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அருகில் கந்துவட்டிக் கொடுமையில் தற்கொலை செய்து கொண்ட விசைத்தறித் தொழிலாளி யின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று சிஐடியு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மே ளனம் வலியுறுத்தி உள்ளது. சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் மாநிலச் சம்மேளன நிர்வாகிகள் கூட் டம் அவிநாசியில் மாநிலத் தலைவர் பி. முத்துசாமி தலைமையில் நடைபெற் றது. இதில் மாநிலப் பொதுச்செயலா ளர் எம்.சந்திரன், மாநிலப் பொருளாளர் எம்.அசோகன் மற்றும் எஸ்.சுப்பிரமணி யம் உள்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் முழுவதும் 15 மாவட் டங்களில் 3 லட்சம் தொழிலாளர்கள் விசைத்தறியில் பணிபுரிகிறார்கள். தின மும் குறைந்தது 12 மணி நேர வேலை செய்து, குறைவான வருமானம், சட்ட சமூக பாதுகாப்பு இல்லாமல், சுரண்ட லுக்கு ஆட்பட்டுள்ளனர். வருமானம் குறைவால், கந்து வட்டிக்கு கடன் வாங்கி திரும்பக் கட்ட முடியாமல் பலர் தற்கொலை செய்துள்ளார்கள். கடந்த வாரம் நாமக்கல் குமார பாளையம் அருகில் விசைத்தறி தொழி லாளி தற்கொலை கொண்டார். இவ ரின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதி வழங்கி 2 குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்வதோடு, தற்கொலைக்கு காரணமான கந்து வட்டிகாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். மேலும் ஒன்றிய அரசின் தவறான கொள்கை காரணமாக உணவு பொருட் கள், பெட்ரோல், டீசல், கேஸ்சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக ஏறி உள்ளது. இவைகளை ஈடுகட்ட கூலி உயர்வு கேட்டு கோரிக்கை வைத்தால் கிடைப் பதில்லை. மறுக்கிற போக்கு அதிகமாகி யுள்ளது. எனவே தமிழக அரசின் தொழி லாளர் துறை இதில் தலையிட்டு தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலா ளர்களுக்கு தேவையான ஊதிய உயர்வு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழி லுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண் டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு நலவாரிய பலன்கள் தராமல், அரசு கமிட்டி அமைக்கப்படாமல் உள்ளது பாரபட்சமான செயலாகும். எனவே உட னடியாக அரசு கமிட்டி அமைத்து செயல் பாட்டிற்கு வந்தால் விசைத்தறி தொழி லாளர்களின் வாழ்வாதாரம் ஓரளவு பாதுகாக்க முடியும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.