districts

img

நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்க கோரிக்கை

அவிநாசி, ஜன.19- தூய்மைப் பணியாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்க கோரி சிஐடியு  சங்கத்தினர் வியாழனன்று திருமுருகன் பூண்டி நகராட்சியில் கோரிக்கை மனு அளித் துள்ளனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் திருப்பூர்  மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை  ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் தொடுத்த  வழக்கில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி,  நகராட்சி பேரூராட்சி, ஊராட்சிகளில், தினக் கூலி, அவுட்சோர்சிங், ஒப்பந்த தொகுப்பு ஊதிய தூய்மைப் பணியாளர், குடிநீர் வாகன  ஓட்டுநர். டி.பி.சி ஊழியர்கள் உள்ளிட்ட உள் ளாட்சி ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின்  குறைந்தபட்ச ஊதிய அரசாணை (2டி) எண்  62ன் படி தினசரி ஊதியம் கணக்கிட்டு வழங் கிட வேண்டும் எனக் கடந்த ஆண்டு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற் பொழுது திருமுருகன்பூண்டி நகராட்சியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர் களுக்கு ரூ.610, குடிநீர் பணியாளர் ரூ.687,  ஓட்டுநர் ரூ..687, டி.பி.சி ஊழியர் ரூ.725 என  தினசரி ஊதியம் கணக்கிட்டு வழங்கிட வேண் டும் என்பதுடன், மேற்கண்ட ஊதியத்தை 01-4-2023 முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகை யும் வழங்கிட வேண்டும் என சிஐடியு சங்கம்  சார்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி  வரும் ஜன.29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக ஊரக வளர்ச்சி உள்ளாட்சி  துறை ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ள னர். இதில், சிஐடியு சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ரங்கராஜ், சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் பழனிசாமி, திருமுருகன்பூண்டி நிர் வாகி வையாபுரி, திருமுருகன்பூண்டி நகர  மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், மார்க் ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப் பினர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.