நாகர்கோவில், மே 14-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநிலகுழு கூட்டம் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மார்த்தாண்டம் மதிலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் என்.ரெஜிஸ் குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எஸ்.பாலா, மாநில பொருளாளர் தீபா, மத்தியக்குழு உறுப்பினர்கள் பாலச்சந்திர போஸ், மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், கோபிநாத், நந்தன் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி மே 20 ஆம் தேதியன்று தமிழக ஆளுநருக்கு தமிழகம் முழுவதும் இருந்து1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 25 சதவீத இடஒதுக்கீடு விண்ணப்ப தேதியை 18 ஆம் தேதியிலிருந்து மே 31 ஆம் தேதி வரைதமிழக அரசு நீட்டிக்க வேண்டும், மேலும் இந்த இடஒதுக்கீட்டிற்காக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும் என்ற நிலையில் நெட் ஒர்க் பிரச்சனைகளால் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. அரசு அலுவலகங்களில் வருமான சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் மிகவும் காலதாமதமாகவே வருமான சான்றிதழ் கிடைக்கும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசுஉடனடியாக நடவடிக்கை எடுத்து வருமான சான்றிதழுக்கு விண்ணப்பித்த 5 முதல் 10 நாட்களுக்குள் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.