districts

அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி நகர சபை கூட்டத்தில் கோரிக்கை

அவிநாசி,நவ.5-  திருமுருகன்பூண்டி 22 ஆவது வார்டு நகர சபை கூட்டத் தில், அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 22 ஆவது வார் டில் நகர சபை கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர  மன்ற உறுப்பினர் பார்வதி சிவகுமார் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். இதில் 22 ஆவது வார்டு பகுதியில்  தேர்வு செய்யப்பட்ட குழு தலைவர்களை பொதுமக்களுக்கு  அறிமுகம் செய்து வைத்தனர்.  இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அகில்  நகர் பகுதியில் சாக்கடை வசதி மற்றும் பூங்கா அமைத்துத்  தருமாறும், பொதுக்கழிப்பிடத்தை சீரமைத்து தரவும்,காவல் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அரசு நடு நிலைப் பள்ளிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவும், தபால்  அலுவலகத்திற்கு நிரந்தர இடம் அமைத்து தரவும், பாலத் தில் தெருவிளக்குகள் அமைக்கவும்,நல்லாறு பகுதியில்  இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தம் செய்ய வும், வீட்டுமனை வழங்கவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். மக்கள் தெரிவித்த கோரிக்கைகளை, நகராட்சி நிர்வாகம்  சார்பில் குறிப்பு எடுத்துக் கொண்டனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர மன்ற  உறுப்பினர் பார்வதி சிவகுமாரிடம் கேட்டபோது, மக்கள்  கூறிய அனைத்து அடிப்படை பிரச்சனைகளையும் நகர மன் றத்தில் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள் வேன் என தெரிவித்தார்.