திருப்பூர், ஆக.10- எல்ஐசி பிரிமீயத்திற்கு ஒன்றிய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என இன்சூரன்ஸ் முக வர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் முகவர்கள் சங்க திருப் பூர் கிளை 11 ஆவது மாநாடு சனியன்று தியாகி பழனிசாமி நிலையத்தில் நடைபெற்றது. கிளைத்தலைவர் கே. பழனி தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில், சங்கக்கொடியை கிளை கமிட்டி உறுப்பினர் ஆனந்த நாராய ணன் ஏற்றி வைத்தார். கோவை கோட்டத் தலைவர் மணிகண்டன் வரவேற்றார். கோட்டச்செயலாளர் கோவர்த்தனன் துவக்க உரையாற்றினார். கோவை கோட்டத் தலைவர் பிரேம்குமார், பொருளாளர் லிங்குசாமி, மாநில கல் விக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலச் செயலாளர் குமார் நிறைவுரையாற்றி னார். இதில், பொதுமக்களின் நலன் கருதி திருப்பூர் எல்ஐசி கிளையை இரண்டாக பிரிக்க வேண்டும். எல்ஐசி பிரிமீயத்திற்கு ஒன்றிய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு: இதில் திருப்பூர் கிளைத்தலைவராக கே.பழனி, செயலாளராக எம்.மாலதி, பொருளாளராக ஜி.ஆனந்த் உட்பட கமிட்டி உறுப்பினர்கள் 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் சித்ரா நன்றி கூறினார்.