திருப்பூர், ஆக.12- தாராபுரம் அருகே ஊர் மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாகவும், அதை ஆய்வு செய்து மீட்டு தர கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்த னர். இதுகுறித்து எஸ்.கள்ளிவலசு ஊர் மக்கள் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மன்னுயிர்பாளையம் கிராமம் எஸ்.கள்ளிவலசு மற்றும் உடையார்பாளையத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு சொந்தமான மயானத்தின் அருகே சோலார் மின் வழி பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந் தது. தற்போது முழுமையாக மயானத்தை ஆக்கிரமித்து சோலார் மின்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இத னால் இப்பகுதியில் யாரேனும் இறந்தால் அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே அரசு இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிக்கப்பட் டுள்ள மயானத்தை மீட்டுத் தர வேண்டும். அதேபோல் தொட்டியன்துறையில் இயங்கி வரும் ஏவிஜி கோழி பண்ணை நிர்வாகம் எங்கள் குடியிருப்புக்கு அருகில் கோழிப்பண்ணை குப்பைகளை கொட்டி வருகின்றனர். இத னால் ஈக்கள் பரவி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், குடியி ருக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது எனவே இதுகு றித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.