நாமக்கல், ஆக.9- எளையாம்பாளையம் கிராமத்திலுள்ள கல்குவாரியை சுற்றியுள்ள வீட்டுமனைகள் குறித்த ஆய்வறிக்கையை உடன டியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கோக் கலை, எளையாம்பாளையத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக இயங்கும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, எளையாம்பாளை யத்தில் உள்ள கல்குவாரிகளைச் சுற்றி 300 மீட்டருக்குள் உள்ள வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் உள்ள விபரச் சான்றுகள் வழங்க வேண்டும் என கடந்த 5 மாதத்திற்கு முன்பு எலச்சிபா ளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால், அம்மனுவின் மீது உரிய ஆவணங்கள் தரவில்லை. மேலும், 300 மீட்டருக்குள் உள்ள அங்கீகாரம் பெற்ற திருமுருகன் நகர் பெயரை இணைக்காமல் சான்று வழங்கிருப்பதை திருத்தம் செய்து கோக்கலை ஊராட்சி மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அங்கீகரிக்கப் பட்ட திருமுருகன் நகர் பெயரை இணைத்து தர வேண்டும் என வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப் பாளர் கே.பழனிவேல் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரா.சா. முகிலன், சமூக செயற்பாட்டாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம், மாவட்டக் குழு உறுப்பினர் பழனியம்மாள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பொன்னுசாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.