districts

img

வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை, ஆக.28- ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள, மக்கள் விரோத மூன்று இந்திய தண்டனைச்சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ கம் தழுவிய மனித சங்கிலி போராட் டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்ட னர்.  கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த நூற் றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, எவ்வித விவாதமும் நடத்தாமல் ஒன்றிய மோடி அரசு மூன்று இந்திய தண்டனை சட்டங் களை கொண்டு வந்தது. காவல்துறைக்கு அதிக அதிகா ரம் வழங்கும், மக்களுக்கு விரோத மான இந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும், எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட் டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை முன் னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு வழக்க றிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் புதனன்று தமிழகம் முழுவ தும் மனித சங்கிலி போராட்டத் திற்கு அறைகூவல் விடுத்திருந் தது.  அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப் பட்டனர். இதில், மூன்று சட்டத்தி னையும் ரத்து செய்து வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், கோவை மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், கோபாலகி ருஷ்ணன், சுதீஷ், தண்டபாணி, முருகேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற வழக்கறிஞர் கள் மனித சங்கிலி போராட்டத்தில் பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துரை, பொருளா ளர் சேவியர், இணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராள மான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல்  இதேபோன்று, ஒன்றிய மோடி அரசை கண்டித்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நீதி மன்ற வளாகத்தின் முன்பு வழக்கறி ஞர்கள் மனித சங்கிலி போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமா னோர் பங்கேற்றனர்.