சிஐடியு ஆர்ப்பாட்டம் சேலம், ஜன.9- தொழிலாளர் நலனுக்கு எதிராக தமிழக அரசு வழங்கிய அரசா ணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சேலம் டிஸ்ட் ரிக்ட் ஜெனரல் லேபர் யூனியன் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாநகரில் இயங்கி வரும் தலேமா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்து வதற்கு பதிலாக தொழிலாளர்க ளுக்கு ஊதிய இழப்பை ஏற்படுத் தும் வகையில் தொழிற்சங்கங்களில் ஆட்சேபனைகளை மீறி தவறான தகவல்களின் அடிப்படையில் அரசு நிர்வாகத்திற்கு சாதகமாக தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தொழிலாளர்களுக்கு லே ஆப் எனப்படும் முறையை அமல்படுத்த தொழிலாளர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைக்கு வரும் தொழிலா ளர்கள், வேலை இருந்தால் மட்டுமே பணி செய்ய வேண்டும். இல்லாவிட் டால் சம்பளம் கிடையாது என்ற அடிப் படையில் இந்த உத்தரவு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிப்படைந்து வருவதாக வும், தமிழக அரசு வெளியிட்ட அர சாணை எண்:663 உடனடியாக ரத்து செய்து, தொழில் அமைதியையும், தொழிலாளர்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியு றுத்தி சிஐடியு சேலம் டிஸ்ட்ரிக்ட் ஜெனரல் லேபர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத் தலைவர் கோபு தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், பொதுச் செயலாளர் பொன். ரமணி, ஜென ரல் லேபர் யூனியன் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் என்.சுந்தரமூர்த்தி சீனிவாசன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.