உடுமலை, ஜூலை 30 - ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவி யல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று உடு மலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செய லாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், மக்கள் விரோத சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூ தனன், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் ஆகியோர் பேசினர். நகரக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், தோழன் ராஜா, வசந்தி, ஜஹாங்கீர் உட்பட திரளானோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசின் சட்ட திருத்தங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.