திருப்பூர், ஜன. 25 – திருப்பூர் மாநகரில் அதிமுக ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டு 10 ஆண்டுகள் கூட ஆகாத டிஎம்எப் பாலம் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால் தற் போது சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட் டுள்ளது. திருப்பூரில் கோர்ட் வீதி, சபாபதிபுரத்தில் இருந்து சுரங்கப்பாதை தோண்டப்பட்டு, லட் சுமி நகர் பிரிட்ஜ் வே காலனி பகுதிக்கு செல்லும் வகையில் டி.எம்.எப். பாலம் கட்டும் பணி கடந்த 2015 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை துறையால் தொடங்கப்பட்டது. அந்தப் பணி தொடங்கப்பட்ட போது, அந்த இடத்தில் கழிவுநீர் தேங்கி வெளியேற்ற முடியாமல் கட்டுமானப் பணி மாதக்க ணக்கில் பாதிக்கப்பட்டது. பின்னர் மாநக ராட்சி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, உடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்து, குளம் போல் தேங்கியிருந்த கழிவு நீரை அகற்றி மீண்டும் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. அதன் பிறகும் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று முடிந்தது. அரசு நிர்வாகத்தின் மூலம் முறையாக திறப்பு விழா நடைபெறுவ தற்கு முன்பே, வாகன ஓட்டிகள் போக்குவ ரத்தை தொடங்கி விட்டனர். பிற்பாடு பாலம் திறப்பு விழா சம்பிரதாயத்திற்கு நடைபெற் றது. இந்த பாலம் கட்டுவதற்கு முன்பாக வடக்குப் பகுதியில் இருக்கும் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி, கொங்கு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தெற்குப் பகுதிக்கு வரு வதற்கு பெருமாநல்லூர் சாலை ரயில்வே மேம்பாலம் வழியாகவோ அல்லது என் ஆர் கே புரம் இரண்டாவது ரயில்வே கேட், மற்றும் அதன் அருகில் உள்ள ரயில்வே நுழைவு பாலம் வழியாகவோ ஊத்துக்குளி சாலைக்கு வந்து நகரத்திற்குள் செல்ல வேண்டும். எனவே டி.எம்.எப். பாலம் அமைக்கப் பட்டது ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு நகருக்குள் வருவதற்கு எளிய வழியாக இருந் தது. பாலம் பயன்பாட்டிற்கு வந்தாலும் கூட, வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தொடர்ந்து வந்தது. கட்டி முடிக்கப்பட்ட பாலத்தில் மீண் டும் கழிவுநீர் தேங்கி, மிகப்பெரிய சாக்கடை யாக காட்சியளித்தது. அத்துடன் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் ஆங் காங்கே உடைந்து பள்ளங்கள் ஏற்பட்டன. மிக வும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பாலம் முறை யாக நன்கு ஆய்வு செய்து, தரமான முறை யில் கட்டப்பட்டிருந்தால் எந்த பிரச்சனை யும் இல்லாமல் போக்குவரத்து நடை பெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் கழிவுநீர் வடிகால் குளறுபடி, ஆங்காங்கே ஏற்பட்டி ருக்கும் உடைப்பு, இந்த சுரங்க பாலத்தின் மேலே இருக்கும் ஊத்துக்குளி சாலை மற்றும் ரயில்வே பாலம் ஆகிய பகுதிகளில் இருந்து கழிவுநீர் கொட்டுவது என வாகன ஓட்டிக ளுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதாக உள் ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவிடாமல் ஊழலு டன் அவசர கோலத்தில் இந்தப் பணி செய்யப் பட்டதால் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது டிஎம்எப் பாலத்தில் முழுமையான பராமரிப்பு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்க னவே இருக்கும் குறைபாடுகளை முழுமை யாக களைந்து, தரமான முறையில் இந்தப் பணியை செயல்படுத்தி டி.எம்.எப். பாலத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.