ஈரோடு, டிச. 4- அந்தியூரில் உள்ள அரசு பள்ளி அருகே ஒலி மாசு ஏற்படுத்தும் நிறு வனத்தை இடமாற்றம் செய்ய நடவ டிக்கை எடுக்காத, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து, ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பொய்யேரிக்கரையில் அரசு பள்ளி செயல்பட்டு வருகி றது. இதன் அருகில் அரசு அனுமதி யின்றி கடந்த 3 ஆண்டுகளாக ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவ னம் செயல்பட்டு வருகிறது. அதி லிருந்து பலமான அதிர்வு மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், குழந்தை கள், அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கடுமை யாகப் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து கடந்த 3 ஆண்டுகளாக முறையீடு செய்தும், போராட் டங்கள் நடைபெற்றும் வருகின் றன. ஆனால் அரசு நிர்வாகம் அனு மதியின்றி செயல்படும் நிறுவ னத்தை தடை செய்யவோ, இடமாற் றம் செய்யவோ நடவடிக்கை எடுக் கவில்லை. இந்நிலையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறுவனத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் திங்களன்று தொடங்கியது. சங்கத் தின் தாலுகாச் செயலாளர் ஏ.கே.பழ னிசாமி தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் ஆர்.விஜயராகவன் போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகேசன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, வாலிபர் சங்க நிர்வாகி எஸ்.செபாஸ்டியன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் தாலு காத் தலைவர் ஜி.செங்கோடன், பி.முருகன், சி.சீனிவாசன், உள் ்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இந்நிலையில் வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் ஆகியோர்மாலை போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் நிறுவ னத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும். அதுவரை ஆலை இயங் கக் கூடாது என உத்தரவிட்டதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்த னர். மேலும் 15 தினங்கள் ஆலை இயங்கக்கூடாது. மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும் என உத்த ரவிட்டதாகக் கூறப்பட்டது. இதனை யடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள் ளப்பட்டது.