districts

img

போதை கும்பலால் கொல்லப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரணம்: சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 6 - போதை கும்பலால் கொல்லப்பட்ட வர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங் குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே போதை கும்ப லால் அப்பாவி இளைஞர் சேகர் படு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் வாவிபாளையம் பகுதியில் வெள் ளியன்று இயக்கம் நடைபெற்றது. முன்னதாக அங்கு நடத்த திட்டமிட்டு  இருந்த ஆர்ப்பாட்டம், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நடைபெற்ற பேச் சுவார்த்தையில், கோரிக்கைகள் மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தன் அடிப்படையில் தெருமுனை கூட்ட மாக நடைபெற்றது. திருப்பூர் மாநகர காவல் ஆணை யரை சந்தித்து முன்வைத்த கோரிக்கை கள் என்ற முறையில், ஜனவரி 2ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சேகர்  குடும்பத்திற்கு நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். நெருப்பெரிச்சல் பகுதியை மையமாக வைத்து புறக்  காவல் நிலையம் அமைத்து குற்ற  செயல்களை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து இப்பகு தியில் குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பை தீவிர படுத்த  வேண்டும். படுகொலையில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை  வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கை கள் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளவி ருக்கும் நடவடிக்கைகள் குறித்தும்  காவல்துறையினர் உறுதியளித்துள்ள னர். இதன் அடிப்படையில் பகுதி மக்களி டத்தில் மேற்கண்ட பேச்சுவார்த்தை யின் முடிவுகளை தெரிவிக்கும் பொருட்டு நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், திருப் பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பி னர் ஆ.சிகாமணி ஆகியோர் பேசினர். பின்பு படுகொலை செய்யப்பட்ட சேகர் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிகழ்வில் ஒன் றிய குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்பு சாமி, எஸ்.பானுமதி, எம்.தன்ராஜ், எஸ். அழகு, கிளைச் செயலாளர் இ.மங்க லக்ஷ்மி,கே.சுப்பிரமணியம், எம்.செல்வ நாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.