மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும் நோக்கில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கோவை மாவட்டம் அன்னூர் கமிட்டி சார்பில் பொதுமக்களிடமிருந்து நிவாரண நிதி சேக ரிக்கப்பட்டது. அன்னூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிவாரண நிதி வசூல் இயக்கத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீபிகா மற்றும் ஒன் றியச் செயலாளர் பிரதீப் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.