உடுமலை, ஜன.29- திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்திற்கு 29 ஆம் தேதி புதனன்று அணையின் பிர தான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட் டது. இதனால் 94 ஆயிரத்து 362 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி கிடைக் கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது, கடந்த மாதம் இரண்டாம் மண் டல பாசனம் முடிவு பெற்ற நிலையில், அடுத்த சுற்றான மூன்றாம் மண்டல பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 29ஆம் தேதி முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை 135 நாட்களுக்குள் போதிய இடைவெளியில் சுமார் 10 ஆயி ரத்து 300 மில்லியன் கன அடிக்கு மிகா மல் ஐந்து சுற்றுகளாக தண்ணீர் திறக்கப் படுகிறது. இதனால் உடுமலை, மடத்துக்கு ளம், திருப்பூர், பல்லடம், தாராபு ரம், காங்கேயம் மற்றும் கோவை மாவட் டத்தில் இருக்கும் சூலூர் உள்ளிட்ட பகு திகளில் 94 ஆயிரத்து 362 ஏக்கர் விளைநி லங்கள் பாசனவசதி பெறும். இன்றைய (புதன்) நிலவரப்படி அணையின் நீர்மட் டம் 52.62 அடியாகவும். அணைக்கு நீர்வ ரத்து காண்டூர் கால்வாய் மற்றும் பாலாறு மூலம் வினாடிக்கு 835 கன அடி யாகவும் உள்ளது. முன்னதாக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாலை தண்ணீர் திறப்பை தவிர்த்திடுக பரம்பிக்குளம் பாசன திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையில் இருந்து விவ சாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறப்பு, கடந்த காலங்களில் காலை நேரத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்ட நிலையில் தற்பொழுது மாலை நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி யில் விவசாயிகள் கலந்து கொள்ள முடி வதில்லை. மேலும் இரவு நேரத்தில் கால் வாய்களில் திடீரென்று தண்ணீர் செல் வது விபத்துகளை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் கருதுவதால் வரும் காலங் களில் காலை நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள் ளனர்.