ஈரோடு, செப். 20- கோபி அருகே உள்ள குண்டே ரிப்பள்ளம் அணையிலிருந்து பாச னத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் புதர்மண்டி கிடக்கும் வாய்க்கால் களை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனபகுதி யில் குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. அணை 41.75அடி உயரம் கொண்டது. இந்த அணை யின் மூலம் வலது இடது கரை வாய்க்கால்கள் பாசனத்தில் 2500க் கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நி லையில் கடந்த இரண்டு மாதத் திற்கு முன் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு, நீர்மட்டம் 41அடியாக உயர்ந்தது. இதனையடுத்து பாசன விவசாயி கள் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசா யிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, குண்டேரிப்பள்ளம் அணையி லிருந்து செப்.20 முதல் 36 நாட்க ளுக்கு தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்தது. இதனடிப்படையில் வெள்ளி யன்று நீர்வள ஆதாரத்துறையினர் பாசன விவசாயிகள் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர். இதனால், வினோபாநகர், பள்ளத்தூர், கொங் கர்பாளையம், வாணிப்புதூர், கள்ளி யங்காடு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2500 ஏக்கர் விவசாய நிலங் கள் பாசன வசதி பெறும் என்ப தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.