districts

img

ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி, ஜூலை 26- பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையிலிருந்து வெள்ளியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் வால்பாறை உள் ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிக ரித்து வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஆழி யாறு அணை தற்போது நிரம்பும் நிலையில் இருப்பதால் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் அணையில் இருந்து 11 மதகுகள் வழி யாக வெள்ளியன்று காலை 9:30 மணி அள வில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ் வில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியா ளர் சிங்காரவேல், உதவி பொறியாளர்கள் கார்த்திக் கோகுல், சந்திர மௌலி, அக்பர்  அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விநாடிக்கு 1210 கனஅடி தண்ணீர் ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.