சேலம், பிப்.15- வாழப்பாடி அருகே உள்ள புழுதிக் குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வாய்க்கால் மற்றும் நேரடி ஆற்றுப்பாசனத் திற்காக வியாழனன்று தண்ணீர் திறக்கப்பட் டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அருநூற்றுமலையில் உற்பத்தியா கும் வசிஷ்டநதியின் குறுக்கே, புழுதிக் குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனை மடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணை யால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத் துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளை யம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்க ளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுார் பட்டி ஏரிகளும், ஆற்றுப்படுகை கிராமங்க ளும் நிலத்தடி நீராதாரமும், பாசன வசதி யும் பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் கடந்தாண்டு போதிய மழையில் லாததால் அணை நிரம்பவில்லை. அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று போனதால், நீர்மட்டம் உயரவில்லை. தற் போது 33.36 அடியில், 53.34 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே, குட்டை போல சேறும், சகதியுமாக தேங்கிக் கிடக்கிறது. அணை யின் நீர்பிடிப்புப் பகுதி வறண்டு கிடப்ப தால் கால்நடை மேய்ச்சல் நிலமாக மாறி உள் ளது. இந்நிலையில், இரண்டு மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை (சிறப்பு நனைப்பு) வாய்க்கால் மற்றும் நேரடி ஆற்றுப் பாசனத்திற்கு, வசிஷ்டநதியிலும் திறந்து விட வேண்டும் என புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயக் கட்டு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வியாழனன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வலது வாய்க்கா லில் விநாடிக்கு 35 கனஅடி வீதமும், இடது வாய்க்காலில் விநாடிக்கு 15 கன அடி வீதம் என மொத்தம் விநாடிக்கு 50 கனஅடி (நாளெ ான்றுக்கு 4.32 மில்லியன் கனஅடி வீதம் 4 நாள்களுக்கு மொத்தம் 17.28 மில்லியன் கன அடி) தண்ணீர் திறக்கவும், வரும் பிப்.19 ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 50 கன அடி வீதம், (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கனஅடி / மொத்தம் 21.60 மில்லியன் கனஅடி தண் ணீர்) அணையின் தலைமை மதகு வழியாக ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக் கான வசிஷ்டநதியில் தண்ணீர் திறக்கவும் அர சாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து, சேலம் மாவட்ட ஆட் சியர் ரா.பிருந்தாதேவி உத்தரவின் பேரில், வியாழனன்று காலை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கீதாராணி, உத விப்பொறியாளர் கோகுல்ராஜா மற்றும் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.