சேலம், டிச.1- ஆனைமடுவு அணை முழுகொள்ள ளவை எட்டியுள்ளதையொட்டி, உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமம், ஆனைமடுவு அணை தனது முழுகொள்ளளவை எட்டிய தைத் தொடர்ந்து, ஞாயிறன்று உபரிநீர் வெளி யேற்றப்பட்டது. நீர்திறப்பு மற்றும் மேற் கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சனி யன்று முதல் மிதமான மழை பெய்து வரு கிறது. குறிப்பாக, சனியன்று மட்டும் ஏற்காட் டில் 144.4 மில்லி மீட்டரும், ஆத்தூரில் 92 மில்லி மீட்டரும். தலைவாசல் வீரகனூரில் 83 மில்லி மீட்டரும் என மொத்தம் சேலம் மாவட்டத் தில் 839.3 மில்லி மீட்டர் (52.46 சதவிகிதம்) மழை பெய்துள்ளது. இதன்தொடர்ச்சியாக ஆனைமடுவு அணை தனது முழுகொள்ள ளவை எட்டியுள்ள நிலையில், தற்பொழுது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் படி, ஞாயிறன்று பகல் 1 மணி நிலவரப்படி அணையிலிருந்து 1,800 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனைமடுவு அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவாய்துறை, நீர் வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறியப் பட்டது. மேலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும், அணை யின் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதா லும், தாழ்வான பகுதிகளான பேளூர், ஏத்தாப் பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட வசிஷ்ட நதியின் கரை யோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பா கவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டு மென நீர்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரு கிறது. பொதுமக்கள் பருவமழை குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிற் கும், 0427-2452202, 0427-2450498, 0427-2417341 என்ற எண்களுக்கும் தகவல் தெரிவிக்க லாம், என்றார்.