districts

img

பழங்குடி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

தருமபுரி, செப்.11- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழங்குடி யின பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப் பதாகக்கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள தேவராஜபாளையம், காட்டுவளவு கருமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந் தவர் கோவிந்தராஜ் (27). இவரும், பையர் நத்தம், போதக்காடு பழங்குடியின பெண் ஆர்த்தி (24) என்பவரும் காதலித்து வந்த  நிலையில், கடந்த 2.7.2019 ஆம் தேதி திரும ணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஷாலினி, பிரியதர்ஷினி, 2 பெண் குழந்தைக ளும், கிருஷ்ணமூர்த்தி ஒரு ஆண் குழந்தை யும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள் ளது. இதுகுறித்து அரூர் மகளிர் காவல் நிலை யம், பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் பலமுறை கணவன், மனைவி இருவரையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு எச்ச ரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலை யில், செவ்வாயன்று காலை அவரது வீட்டில்  ஆர்த்தி இறந்த நிலையில் உடல் காயங் களுடன் பிணமாக இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அரூர் காவல் உதவி கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற் றும் தடையவியல் துறையினர் உடலை ஆய்வு மேற்கொண்டு, புலன் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின் உடலை பிரேத  பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆர்த்தியை கோவிந்த ராஜின் தந்தை நாகராஜ் பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்துள்ளார் என குற் றஞ்சாட்டி, ஆர்த்தியின் உறவினர்கள் பாப்பி ரெட்டிபட்டி காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர்.  இதனிடையே, செவ்வாயன்று வீட்டினுள்  ஆர்த்தியின் முடிகள் பிய்த்து எரியப்பட்டு, வளையல்கள் ஆங்காங்கே உடைந்து காணப்பட்டது. மேலும், அவரின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் கசிந்துள்ளது. எனவே, அவ ரது உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.