districts

img

பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

சேலம், நவ.20- தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்தாக குற்றஞ் சாட்டி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஏத்தாபூர் பனைமடல் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செல்லம் (35). நிறைமாத கர்ப்பிணியான செல்லம் பிரசவத்திற்காக சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவ ருக்கு கடந்த 14ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதனை யடுத்து 17 ஆம்தேதி அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே சிகிச்சை பெற்று வந்த செல்லம் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இந்நிலையில், தவறான மருத்துவ சிகிச்சையின் கார ணமாகவே பெண் உயிரிழந்தார் என குற்றம்சாட்டி உற வினர்கள் உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து, சேலம் நகர உதவி ஆணையர் ஹரிசங்கரி, ஆய்வாளர் சந்திரகலா உள்ளிட்ட காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.