பொள்ளாச்சி பிப்.10- யுஜிசி வரைவு விதிக ளைத் திரும்பப் பெறக்கோரி பொள்ளாச்சியில் ஞாயி றன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. ஆளுநருக்கு அதிக அதி காரம் வழங்கி, மாநில அர சின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள யுஜிசி வரைவு விதிமுறைகள் திரும்பப் பெற வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா குழு உறுப்பினர் கே. மகாலிங்கம் தலைமையில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தாலுகா குழு உறுப்பினர் வி.பாலகுருசாமி வரவேற் றார். பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் எம்.அன்பரசன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.துரைசாமி ஆகியோர் பேசினர். இதில், தாலுகா குழு உறுப்பினர்கள் டி.விஜயா, எம்.சித்ரா, பி.ஆனந்தராஜ், ஸ்டாலின் பழனிச்சாமி, பி.சங்கர் கணேஷ், எம்.அப்பாவு, எம்.அங்கமுத்து உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில் தாலுகா குழு உறுப்பினர் எஸ்.மாதேஸ்வ ரன் நன்றி கூறினார்.