districts

img

குன்னத்தூர் வழித்தட பேருந்துகள் குறைப்பு

திருப்பூர், ஆக. 3 – பெருமாநல்லூரில் இருந்து குன்னத் தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த வட்டாரத் தில் இருக்கும் பொது மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். பெருமாநல்லூரில் இருந்து குன்னத் தூர் வழித்தடப் பேருந்துகளின் எண் ணிக்கை கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பள் ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும்  வேலைக்குச் செல்லும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக அரசுப் போக்குவரத்து அதி காரிகளிடம் பல முறை புகார் தெரி வித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. புகார் தெரிவித்தால் உரிய பொறுப்பான பதில் தெரிவிப்பதும் இல்லை. இந்த நிலையில் முதல்வ ரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் அனுப் பப்பட்டது. அதற்கு, அரசுப் போக்குவ ரத்துக் கழக கோவை கோட்ட பொது  மேலாளர் கோரிக்கையை நிறைவேற் றித் தருவதாக பதில் அனுப்பி இருக்கி றார். எனினும் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படாமல் அலட்சிய நிலையே தொடர்கிறது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிக ரித்து தடையில்லாமல் தொடர்ந்து பேருந்துகளை இயக்குவதற்கு நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி மக்களிடம்  கையெழுத்து இயக்கம் நடத்துவ தென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆதியூர் கிளை தீர்மானித்து மக்க ளைச் சந்தித்து கையெழுத்துப் பெற்று  வருகின்றனர். போக்குவரத்து நிர்வாகத்திடம் மக்க ளிடம் கையெழுத்துப் பெற்ற மனுவை அளிக்க முடிவு செய்துள்ளனர். அதன் பிறகும் இதேபோன்ற அலட்சிய நிலை யில் போக்குவரத்து நிர்வாகம் தொடரு மானால் பொது மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தவும் தயாராக இருப்ப தாக மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித் துள்ளனர்.