திருப்பூர், டிச.9- மனிதகுலத்தின் முழு விடுதலையை சாத் தியமாக்க 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மாமேதை லெனின் தலைமையில் தொழிலா ளர்கள், விவசாயிகள் அணிசேர்ந்து நடத்திய உலகின் முதல் சோசலிச அரசை நிறுவிய மகத்தான ரசியப் புரட்சியை நினைவு கூறும் வகையில் இன்று திருப்பூரில் செந்தொண்டர் பேரணி நடைபெற உள்ளது. 106 ஆவது நவம்பர் புரட்சி தினத்தை முன் னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பி ருந்து மாலை 4 மணிக்கு செந்தொண்டர் பேரணி புறப்படும். திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் அருகே நொய்யல் பாலம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உன்னிகிருஷ் ணன் தலைமை ஏற்கிறார். இதில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் பங்கேற்று செந்தொண்டர் பேரணி பொதுக் கூட்ட நிகழ்வில் தீக்கதிர் நாளேட்டின் சந்தா தொகையை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்ற இருக்கிறார்கள். 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மாமேதை லெனின் தலைமையில் தொழிலாளர்கள், விவசாயிகள் அணிசேர்ந்து நடத்திய சோச லிசப் புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற் கான நலனை முன்மொழிந்தது. உலகம் முழு வதும் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்க பட்டவர்களுக்கு உந்துதலை தந்தது. திட்ட மிடப்பட்ட பொருளாதாரம், தொழிலாளர்கள் உரிமை, பெண் உரிமை, முற்போக்கு சிந் தனை, அறிவியல் வளர்ச்சி, உலக சமாதானம் என ரஷ்யப் புரட்சி உலகிற்கு முன் மாதிரி களை உருவாக்கித் தந்தது. மனிதனை மனி தன் சுரண்டும் சமூகத்திற்கு முற்று புள்ளி வைத்து, சமூக ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்து வத்தை நடைமுறைப்படுத்திக் காட்டியது. ஆகவேதான் உலகம் முழுவதும் கம்யூ னிஸ்டுகள் நவம்பர் புரட்சி தினத்தை பேரெ ழுச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதன்படிதான், திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அணிகள் முழுவதும் புரட்சி தினத்தை கொண்டாட நோட்டீஸ், போஸ்டர், சுவர் விளம்பரப் பணிகள் மாவட்டம் முழுவ தும் நடைபெற்றுள்ளது. நகரம் முழுவதும் எங்கு திரும்பினாலும் செங்கொடிகளாக காட் சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான கொடிகள் நகரம் முழுவதும் கட்டப்பட்டுள்ளது. இதோடு கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் தீக்கதிர் ஆண்டு சந்தா ஒப்படைக்கும் பணியும் நடை பெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் சீருடை அணிந்து குடும்பம் குடும்பமாக பங் கேற்க உள்ளனர்.