districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆன்லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு

ஈரோடு, ஜூலை 28- ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.5 லட்சத்தை ஈரோடு  சைபர் க்ரைம் காவல் துறையினர் மீட்டுக் கொடுத்தனர். கோபிசெட்டிபாளையம், வேட்டைக்காரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் அறிமுகம்  இல்லாத ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் பங்கு சந்தை புரோக்கர் என்றும், அதிக வருமானம் பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி பால சுப்பிரமணியம் ரூ.5 லட்சத்தை வங்கிக் கணக்கிற்கு அனுப்பி யுள்ளார். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. இதனையடுத்து ஈரோடு சைபர் க்ரைம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், சந்தேக நபரின்  வங்கிக் கணக்கை முடக்கி, ரூ.5 லட்சத்தை மீட்டுக் கொடுத் தனர்.

சேலம்: ஆக. 3ல் உள்ளூர் விடுமுறை

சேலம், ஜூலை 28- சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு வரும் ஆக. 3 ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சுதந்திரப்  போராட்ட வீரர்தீரன் சின்னமலையின் நினைவு நாளை  முன்னிட்டும், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டும் ஆக. 3 ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

திருப்பூரில் பேருந்து மோதி விபத்து பெண் காவலர் படுகாயம்

திருப்பூர், ஜூலை 28 - திருப்பூரில் அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாக னத்தில் பயணித்த பெண் காவலர் படுகாயம் அடைந்தார். திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வேலை செய்து  வருபவர் சாந்தி. இவர் வெள்ளியன்று காவல் நிலையத்தில் இருந்து குமரன் சாலையில், கலைஞர் பேருந்து நிலையம்  நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார். அப்போது குமரன் சாலையில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது  மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காவலர் சாந்தி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட சாந்தி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார். விபத்தில் சிக்கிய அரசு பேருந்தின் ஓட்டுநர்  பாலசுப்பிரமணியனை பிடித்து வடக்கு காவல் நிலைய காவ லர்கள் விசாரித்து வருகின்றனர்.

உதகைக்கு சிறப்பு ரயில் சேவை

கோவை, ஜூலை 28- சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்திருப்பதால் மேட் டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட் டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இத னால் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத் திற்கான ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி  வரும் ஆக.5 – 26 ஆம் தேதியன்று வரை மேட்டுப்பாளையத்தி லிருந்து உதகைக்கு சனிக்கிழமை தோறும் காலை 9.10  மணிக்கு ரயில் புறப்பட்டு, 2.25 மணிக்கு ஊட்டி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல், ஆக.6 – 27 ஆம் தேதியன்று வரை  ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 11.25க்கு உதகையிலி ருந்து புறப்படும் ரயில், 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல் லும் ரயிலில் முதல் வகுப்பில் 40 சீட்டுகளும், இரண்டாம் வகுப் பில் 140 சீட்டுகளும் இருக்கும். குன்னூரிலிருந்து உதகை செல் லும் ரயிலில் முதல் வகுப்பில் 80 சீட்டுகளும், இரண்டாவது வகுப்பில் 140 சீட்டுகளும் இருக்கும். இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை: 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கோவை, ஜூலை 28- கோவை மாவட்டத்தில் உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவ னங்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட் டுள்ளனரா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலை யில், குனியமுத்தூரில் உள்ள ஒரு உணவகம் மற்றும் கடைவீதி செட்டி தெருவில் உள்ள  நகைக்கடையில், குழந்தை தொழிலாளர் கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குழந் தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் குறிப் பிட்ட உணவகம் மற்றும் நகைக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த் தியது தெரியவந்தது. இதனையடுத்து அதி காரிகள் உணவகத்தில் பணி செய்த 3 சிறு வர்களையும், நகைக்கடையில் பணியாற்றிய 4 சிறுவர்களையும் மீட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மீது காவல் நிலை யத்தில் அதிகாரிகள் புகாரளித்தனர். அதன் பேரில் சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நகைக்கடை உரிமையாளர் லட்சுமி நாராய ணன், உணவக மேலாளர் முகமத் ஹரீஸ் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

சம்பங்கி பூக்களுக்கான தேவை அதிகரிப்பு

நாமக்கல், ஜூலை 28- நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியைச் சுற்றிலும் மலை குன்றுகள், நீர் நிலைகள் உள்ளதால், ஆண்டு முழுவதும்  குளர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இத னால், மலர் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மங் களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், ஒண்டிக் கடை, திம்மநாய்கன்பட்டி, மத்துருட்டு, வேப் பிலைக்குட்டை மற்றும் சுற்றுப்புற பகுதி களில் பரவலாக சம்பங்கி சாகுபடி செய்துள்ள னர். சம்பங்கியை பொறுத்தவரை அதிக செல வில்லமால் 40 நாட்களில் முழு அளவில் மக சூலுக்கு வந்து விடுகிறது. இதன் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதி யில் மலைகள், ஏரிகள் சூழ்ந்துள்ளதால், எந்த பயிராக இருந்தாலும் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்ற நிலை உள்ளது. சம்பங்கியில் ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செல வாகிறது. ஒரு கிலோ சம்பங்கி ரூ.70 முதல் ரூ.75 வரை விலை போகிறது. ஆத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கே வந்து வாங்கிச்  செல்கின்றனர். சேலம் மற்றும் வாழப்பாடி சந்தைக்கு நேரடியாக கொண்டு செல்லும் போது அதிக லாபம் கிடைக்கிறது. ஆடிப்பண் டிகை களை கட்டியுள்ளதால், தற்போது சம் பங்கி பூக்களுக்கான தேவை அதிகரித்து, தட் டுப்பாடு ஏற்பட்டுள்ளது, என்றனர்.

அரியவகை ஆந்தை

நாமக்கல், ஜூலை 28- நாமக்கல், திருச்செங் கோடு கோழிநத்தம் சாலையி லுள்ள மின்சார கம்பியில் சிக்கி அரியவகை ஆந்தை ஒன்று உயிருக்கு போராடியது. இதைக்கண்ட அப்பகுதி மக் கள் திருச்செங்கோடு தீய ணைப்பு நிலையத்திற்கு தக வல் தெரிவித்தனர். அதன்பே ரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மின்சார கம்பியிலிருந்து அந்த ஆந்தையை பத்திரமாக மீட்டு, ராசிபுரம் வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.