districts

img

பூர்வீக வன நிலங்களுக்கு மனுக்கள் பெற்று பட்டா வழங்கு

தருமபுரி, ஜூலை 2- பழங்குடியினருக்கு இனச் சான்று, பட்டா, வீட்டு மனை உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழு வதும் செவ்வாயன்று தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரூர் ஒன்றி யம், சிட்லிங் ஊராட்சியை சேர்ந்த மலை யாளி இன பழங்குடி மக்களுக்கு அரசு நிபந்தனை பட்டா வழங்கியது. இந்த நிலங்களை சேலம் மாவட்டத்தை சேர்ந்த உயர்சாதியினர் 40 ஆண்டுக ளுக்கு முன்பு மோசடியாக ஏமாற்றி அபகரித்துள்ளனர். நிலப்பதிவு செய் துள்ளதை ரத்து செய்து நிலத்திற்கு உரிமையான பழங்குடி மக்களிடமே நிலத்தை வழங்கவேண்டும்.  2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப் படி வனத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கால்நடைகள் மேய்த்துக் கொள் வதற்கு அனுமதி வழங்கவேண்டும். வெளியேற்றுவதை கைவிட வேண்டும்.    பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சித்தே ரியில் பல்லாண்டு காலமாக சாகுபடி செய்து வரும் மலையாளி இன பழங்கு டிகளின் அனுபவ நிலங்களுக்கு பட்டா, வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கிடுகவேண்டும். வீடற்றவர்க ளுக்கு வீடு கட்டி தரவேண்டும். சித்தேரி பகுதியில் அனைத்து மலை கிராமங்க ளுக்கும் சாலை வசதி செய்து தர வேண்டும். பழங்குடியின மக்க ளுக்கு இனச் சான்று விரைந்து வழங்க வேண்டும். ஆலமரத்தூர் சுடுகாடு 20 ஆண்டு காலமாக மக்கள் பயன் படுத்தி வருதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மோட்டுப்பட்டியில் பழங்குடி இன மக்களுக்கு வனத்திலிருந்து பிரதான சாலைக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் நொனங்கலூர் கிராம பழங்குடியின மக்கள் காலங்காலமாக பயன்படுத் தும் சுடுகாட்டு பாதையை தனிநபர் ஆக் கிரமிப்பு செய்துள்ளதை அகற்றி பாதையை எடுத்துக் கொடுக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மலைவாழ் மக்கள் சங்கத்தின் தரு மபுரி மாவட்டத் தலைவர் ஏ.அன்பு ரோஸ் தலைமை வகித்தார். இதில், மாநி லத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட  செயலாளர் கே.என்.மல்லையன்,  சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார், அரூர் ஒன்றியசெயலாளர் பி.குமார்,  பாப்பிரெட்பட்டி ஒன்றியச் செயலா ளர் தி.வ.தனுசன், சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் ஏ.கண்ணகி,  மாவட்டப் பொருளாளர் எல்.வெங்கட் ராமன், குருமன்ஸ் பழங்குடி சங்க மாவட்ட செயலாளர் சி.சொக்கலிங்கம், மலைசங்க வட்ட பொறுப்பாளர் எஸ்.கே.கோவிந்தன், விவசாயிகள் சங்க ஒன்றியசெயலாளர் ஏ.நேரு, கோட்டப்பட்டி - சிட்லிங் மலை கமிட்டி தலைவர் எஸ்.அண்ணாமலை செயலாளர் ஆர்.சேரன் உள்ளிட்ட திரா ளானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட் டத்தை தொடர்ந்து அரூர் கோட்டாட்சி யரிடம் கோரிக்கை மனுக்களை தலைவர்கள் அளித்தனர். 

ஈரோடு

அனைத்து பழங்குடி மக்களுக்கும் சாதிச்சான்று வழங்கிடக் கோரி கோபி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர். ஈரோடு மாவட்ட மலையாளி இனமக் களை பழங்குடி பட்டியலில் சேர்த்திட வேண்டும். யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வரு தைத் தடுக்க வேண்டும். காட்டுப் பன்றியைக் கொல்வதற்கு அனுமதிய ளிக்க வேண்டும். கடம்பூரில் உண்டு உறைவிட பள்ளி அமைக்க வேண்டும். குன்றியில் புதிய சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். சுசில் ்கரையில் இருக்கும் சுகாதாரநிலையத்திற்கு தேவையான மருத்துவர், செவிலியர் நியமிக்க வேண்டும் கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தைமேம்படுத்த வேண்டும். குத்தியாலத்தூர், திங்க ளூர், மாக்கம்பாளையம், குன்றி உள் ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண் டும். பர்கூர் மலையை மூன்று பகுதிக ளாகப் பிரித்து ஒன்றியமாக அறி விக்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மலைவாழ் மக்கள் சங்கத்தின் சத்தி மலை வட்டார கமிட்டி தலைவர் பி.தங்கவேல், பர்கூர் மலை வட்டார கமிட்டி தலைவர் விஜ யன் ஆகியோர் தலைமை வகித்த னர். மாநிலத் செயலாளர் எஸ்.துரை ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ரகுரா மன், மலைவாழ் மக்கள் சங்கத் தின் முன்னாள் செயலாளர் சி.துரை சாமி, முன்னாள் நகர மன்ற உறுப்பி னர் ஜி.ஏ.துரைசாமி, தவிச மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் பி.சடையப்பன், மாவட்டப் பொருளாளர் கே.ரத்தனம் ஆகியோர் உரையாற்றினர்.  இதில், ஏராளமான மலைவாழ் மக் கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.

நாமக்கல் 

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் செம்மேடு, கொல்லிமலை பழங்குடி யின திட்ட அலுவலகம் முன்பு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ்.கே.மாணிக்கம் ஆர்ப்பாத்திற்கு  தலைமை ஏற்றார். இதில், சங்க நிர்வா கிகள் வி.கே.வெள்ளைச்சாமி, கே.வி.ராஜ், இ.பன்னீர்செல்வம், ஏ.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு நாமக்கல் மாவட்ட. தலைவர் எம்.அசோகன் உரையாற்றிறனார். இதில், சிபிஎம் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண் ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தங்க ராஜ், செயலாளர் சின்னசாமி ஆகி யோர் உரையாற்றினர்.  இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.சி.சிவனே சன், வி.சி.மணி, எஸ்.துரைசாமி, எஸ்.பழனிசாமி, ஏ.சிவராஜ், வி.பழனிசாமி, இ.சின்னப்பையன், சி.ரேவதி, மணி (எ)சிற்றரசு, எஸ்.ராஜாமணி, சி.பொன் னம்மாள், கே.வெள்ளையன், எஸ்.சேக ரன், வி.சி.பழனிசாமி, வி.செல்வகு மரேசன், ராஜேந்திரன், உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தில் கொல்லிமலை இன மக்களுக்கு தடையின்றி ஜாதி சான்றிதழ் (எஸ்டி) காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும். கொல்லிமலையில் செயல்பட்டு வரும் தோட்டக்கலைத்துறை வேளாண் துறை ஸ்பைசிஸ் போர்டு மற்றும் காபி போர்டு பகுதிகளில் இடைத்தரகர் ளின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்திட வேண்டும். உண்மையான பயனாளிக ளுக்கு அரசு மானியம் கிடைத்திட உதவி செய்ய வேண்டும். கொல்லிமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். கொல்லிமலை யில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும், தங்களின் கிராமங்க ளில் தங்கி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

சேலம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் எ.பொன் னுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பால் சங்க மாநில நிர்வாகி படைவீடு பெருமாள், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஏ. ராமமூர்த்தி, சிபிஎம் மலை கமிட்டி செயலாளர் பாக்யராஜ், மலை வாழ் மக்கள் சங்க மாநில குழு உறுப்பி னர் கிருஷ்ணமூர்த்தி, சின்னமணி, தமிழ் நாடு விவசாய சங்க ஆத்தூர் நிர்வாகி இல. கலைமணி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முன் னணி ஊழியர்கள் திரளானோர் ஆர்ப் பாட்டத்தில் எண்ணற்றோர் பங்கேற்ற னர்.