districts

img

மீளும் பின்னலாடை ஏற்றுமதி; மீளாத மக்கள் வாழ்வு

திருப்பூர், ஜன. 9 – திருப்பூரில் கடந்த 2023 ஆம்  ஆண்டு ஏற்பட்ட ஏற்றுமதி சரிவில்  இருந்து 2024ஆம் ஆண்டு மீண்டு வந்துள்ளதை ஆயத்தஆடை ஏற்று மதி புள்ளிவிபரம் உறுதி செய்கிறது.  இதனால் இந்த ஆண்டு ரூ.40 ஆயி ரம் கோடி என்ற அளவுக்கு ஏற்றுமதி  அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர் கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதியில் திருப் பூர் சுமார் 55 சதவிகிதம் பங்களிப்பு  செய்கிறது. இந்த நிலையில் கடந்த  சில ஆண்டுகளாக நெருக்கடியைச்  சந்தித்து வந்த திருப்பூர் 2024ஆம் ஆண்டு ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் ஏப்ரல்  முதல் ஆகஸ்ட் வரை ஐந்து மாத  காலத்தில் 14 ஆயிரத்து 679 கோடி  ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெற் றுள்ளது. திருப்பூர் பின்னலாடை ஏற் றுமதி இதற்கு முந்தைய 2023 – 24 ஆம் நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் 12 ஆயிரத்து 995  கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏற்றுமதி  ஆகியிருந்தது. அதை ஒப்பிடு கையில் நடப்பு 2024 – 25 நிதியாண் டின் முதல் ஐந்து மாத காலத்தில் ஆயிரத்து 684 கோடி ரூபாய் அதிக ரித்து, 13 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, நவம்பர் 2024 வரையிலான அடுத்த மூன்று மாத  காலத்திலும் ஏற்றுமதி ஒப்பீட்டள வில் அதிகரித்து வருகிறது. ஒட்டு மொத்த இந்திய ஆயத்த ஆடை  ஏற்றுமதி செப்டம்பரில் 18 சதவிகி தம், அக்டோபரில் 36 சதவிகிதம், நவம்பரில் 11 சதவிகிதம் என அடுத் தடுத்து வளர்ச்சியைப் பதிவு செய் துள்ளது.  மொத்தத்தில் கடந்த 2023 – 24 நிதி யாண்டை ஒப்பிடும்போது 2024 – 25  நிதியாண்டில் இதுவரை 13 சதவிகி தம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன்  மூலம் சரிவில் இருந்து திருப்பூர் ஏற் றுமதி மீண்டு வந்திருப்பதை இந்த  புள்ளிவிபரம் உறுதிப்படுத்துகிறது. இந்த வளர்ச்சி வேகத்தைக் கணக்கிடும்போது, திருப்பூரின் 2024  –25 நிதியாண்டுக்கான மொத்த ஏற் றுமதி ரூ.40 ஆயிரம் கோடியை எட் டும் என ஏற்றுமதியாளர்கள் நம் பிக்கை தெரிவிக்கின்றனர். எனவே  சரிவில் இருந்து திருப்பூர் மீள்வது  உறுதியாகிறது. ஏற்கெனவே உக்ரைன் – ருஷ்ய  போர், உலகளாவிய பொருளாதார  நெருக்கடி, அமெரிக்க, ஐரோப்பிய  நாடுகளின் சந்தையில் சரிவு ஆகி யவை கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரின் ஏற்றுமதி சரிவுக்குக்  காரணமாக இருந்தன. அதேசமயம்  கடந்த ஆகஸ்டில் வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி கார ணமாக, வங்கதேசத்திற்குச் சென்ற  பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள்  இங்கு திரும்பியதும் இந்த வளர்ச் சிக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் பணவீக்கம் அதி கரிப்பது உள்நாட்டு சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், அமெரிக்க டால ருக்கு எதிராக இந்திய ரூபாய் சரி வைச் சந்தித்து வருகிறது. அதன் அடிப்படையில் அமெரிக்க டால ரில் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுப டும் ஏற்றுமதியாளர்கள் பலனடை கின்றனர். மொத்தத்தில் திருப்பூர் ஏற்று மதி மீட்சி பெற்றாலும் கூட, அது  திருப்பூரின் சிறு, குறு, நடுத்தரத்  தொழில்களில் பிரதிபலிக்க வில்லை. மக்களின் பணப்புழக்கத் திலும் வெளிப்படவில்லை. ஏனெ னில் ரூ.1000 கோடிக்கு அதிகமாக விற்றுமுதலில் ஈடுபடும் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள்தான் பல னடைகின்றன. திருப்பூர் சரிவில் இருந்து மீண்டாலும் கூட அது இங் குள்ள அனைத்து தரப்பினரின் வளர்ச்சியாக மாறவில்லை என்ப தையே இந்த நகரின் நிலை காட்டு கிறது.