districts

img

தக்காளிக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்

தருமபுரி, செப்.28- தக்காளிக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தருமபுரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்  கூட்டத்தில் விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட வரு வாய் அலுவலர் பிரியா தலைமை யில் விவசாயிகள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் பேசிய விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசுகையில், ஒகே னக்கல் பகுதியிலிருந்து நீரேற்று மூலம் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒவ் வொரு ஒன்றியத்திலும் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் எந்தி ரத்தை கொள்முதல் செய்து விவ சாயிகளுக்கு குறைந்த வாடகை யில் தர வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அளிக் கும் மனுக்களுக்கு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யாமலேயே பதில் அளிக்கின்றனர். முறையாக நேரில் ஆய்வு செய்து பதில் தர  வேண்டும். நில அளவை செய்ய முறையாக கட்டணம் செலுத்தி கோரிக்கை வைத்தும், கிராம நிர் வாக அலுவலர் மற்றும் நில அள வையர்கள் சிலர் விடுமுறை நாட்க ளில் அளவீடு பணி செய்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக விவ சாயிகள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து பாப்பிரெட்டிப் பட்டி பகுதியைச் சேர்ந்த அண்ணா துரை என்ற விவசாயி பேசுகையில், தக்காளி தற்போது கிலோ 10 ரூபாய்க் கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிக ளுக்கு நட்டம் ஏற்படுகிறது. 200  ரூபாய்க்கு விற்றபோது விவசாயி கள் கோடீஸ்வரர் ஆனார்கள் என்று  மக்கள் பேசினர். ஆனால், இன்று  கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையா கிறது. எனவே, தக்காளிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், தக்காளிகளை கொள் முதல் செய்து, குளிர்பதன கிடங்கில் வைத்து, அதிலிருந்து சாஸ், ஜாம் தயாரிக்கலாம். அதற்கு ஏன் முன் அரசு வரவில்லை? தருமபுரி மாவட் டத்திற்கு வழங்கப்பட்ட நடமாடும் தக்காளி மதிப்பு கூட்டம் எந்திரம்  எங்கே இருக்கிறது? என்று அடுக் கடுக்கான கேள்வி எழுப்பினார். இதற்கு, நாட்டு தக்காளியிலி ருந்து மட்டும்தான் சாஸ், ஜாம் போன் றவை தயாரிக்க முடியும் என அதி காரிகள் பதில் அளித்தனர். இதனை யேற்காத விவசாயிகள், பெரும்பா லானோர் ஹைபிரிட் தக்காளியை சாகுபடி செய்கின்றனர். சிங்கப்பூ ரில் இதே தக்காளியிலிருந்து தான்  சாஸ், ஜாம் எல்லாம் தயாரிக்கிறார் கள். ஏன் நீங்கள் செய்ய முன் வர வில்லை? என்று பதில் கேள்வி எழுப் பினர். அப்போது, விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு ஒரு சில ஒன் றியங்களில் வருவாய்த்துறை அதி காரிகள் வராததால் விவசாயிகள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மாவட்ட வருவாய் அலு வலர் பிரியா தடுமாறினார்.