கோவை, ஜன.19- கோவை நீதிமன்ற உத்தரவின் படி, சின்ன தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை ஜன.24 ஆம் தேதி யன்று நடைபெற உள்ளது. கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன் றியத்துக்குட்பட்ட சின்ன தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு திமுக. ஆத ரவு பெற்ற வேட்பாளர் சுதா என்ப வர் கை உருளை சின்னத்திலும், அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்தர வடிவு என்பவர் பூட்டு சின் னத்திலும் போட்டியிட்டனர். இதை யடுத்து 2020 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதியன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது நீண்ட இழுபறிக்கு பின்னர் அதி முக ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்தர் வடிவு 3 வாக்குகள் வித் தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறி வித்தார்.
தொடர்ந்து அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதனிடையே. இந்த வெற்றிக்கு சுதா மறுப்பு தெரிவித்து மனு அளித் தார். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்கவில்லை. இதை யடுத்து சுதா கோவை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், சவுந்தர வடிவு வெற்றி பெற் றதை ரத்து செய்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதி ராஜசேகர் சின்ன தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதி வான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். இந்த மறு வாக்கு எண் ணிக்கையை வீடியோ பதிவு செய்து அதன் முடிவை நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித் தார். இதைத்தொடர்ந்து வரும் ஜன.24 ஆம் தேதியன்று துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அருணா நகர் சமுதாயக்கூடத்தில் மதியம் 12.30 மணிக்கு சின்னதடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான மறு வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. இதற்கான அறி விப்பு நோட்டீஸ் சம்பந்தப்பட்ட நபர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது.