districts

img

ராசவாய்க்கால் மேடு பகுதி பட்டியலின மக்கள் 12 பேர் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா

திருப்பூர், ஜன. 6 - சாமளாபுரம் பேரூராட்சியில் நீர் வழிப் புறம்போக்கு என குடியிருப்பு  அகற்றப்படும் நிலையில் இருந்த  பட்டியலின மக்கள் 12 பேர் குடும்பத் துக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளபாளை யம், ராச வாய்க்கால் மேடு பகுதியில் நான்கு தலைமுறைகளாக பட்டியலின  அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த சுமார்  30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.  ஏழை கூலித் தொழிலாளிகளின் இந்த  வாழிடம் அரசால் நீர்வழி புறம்போக்கு  என அறிவிக்கப்பட்டது. இதனால்  மக்கள் வெளியேற்றப்படும் சூழல்  ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளபாளையம் பகுதி புரட்சிகர இளைஞர் முன்னணி  அமைப்பினர் அந்த கிராமத்தில், க.ச. எண்.572/8 –இல் அரசிற்கு சொந்த மான புறம்போக்கு இடம் இருப்பதை கண்டறிந்து, ராசவாய்க்கால் மேடு பகு தியில் தகுதியான 12 நபர்களைக் கண்ட றிந்து அவர்களுக்கு விலையில்லா  வீட்டு மனை பட்டா வழங்க திருப்பூர்  மாவட்ட நிர்வாகத்திற்கும், பல்லடம்  வட்டாட்சியருக்கும் தொடர்ந்து  கோரிக்கை வைத்தனர்.  

இக்கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி கோவை மாவட்ட செய லாளர் யு.கே.சிவஞானம், திராவிட முன் னேற்ற கழகத்தைச் சார்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடமும், வரு வாய்த் துறையிடமும் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி தொடர்ந்து நடவடிக்கை எடுத்தனர். இந்த தொடர் முயற்சிகள் காரணமாக சாமளாபுரம் பேரூராட்சியில் மேற் கண்ட 12 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கடந்த டிசம்பர் 23ஆம்  தேதி அன்று தீர்மானம் நிறைவேற்றி வரு வாய்த் துறைக்கு அனுப்பி வைத்த னர்.  கடந்த டிச. 29ஆம் தேதி அன்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகி யோர் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர்  விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி  மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில்  மேற்படி பயனாளிகள் ராமாத்தாள்,  பாலாமணி, இந்திராணி, கலைவாணி,  பூமணி, பொன்னி,ராஜாமணி, அருக் காணி, சுலோச்சனா, கலைவாணி, வளர் மதி மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 12 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கினர். தமிழ்நாடு அரசு 12  பயனாளிகளுக்கும் வீடு கட்டுவதற்கு உரிய உதவிகள் செய்திடுவது அவசிய மாகும் என்று தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் கோரியுள்ளனர்.