districts

img

அரிதான ஓநாய் பாம்பு மீட்பு

கோவை, ஜூன் 17- மசக்காளிபாளையம் பகு தியில் உள்ள ஒரு வீட்டில் தென்பட்ட அரிதான மரமணு  குறைபாடுடைய வெள்ளிக் கொல் வரையான் பாம்பை  (ஓநாய் பாம்பு) வனத்துறையி னர் மீட்டனர். கோவை மாவட்டம், மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டி கடையில் பாம்பு ஒன்று  இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாம்புபிடி வீரரான  சித்ரன் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பே ரில் விரைந்து சென்ற சித்ரன், பாம்பை பார்த்தபோது, அந்த  பாம்பு விஷமற்ற, அரிதாக தென்படும் மரமணு குறைபாடு டைய வெள்ளிகோல் வரையான் பாம்பு என்பது தெரிய வந் தது. இதனை ஓநாய் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. மர பணு குறைபாடுடன் உள்ள வெள்ளிகோல் வரையான் பாம்புக ளின் உடலில், தழும்புகள் இல்லாமல் தோல் உரித்தது போல  உலாவும். இந்த பாம்பை பிடித்து வனத்துறையில் தகவல் சொல்லப்பட்டு, அதன் வாழ்விடத்தில் விடப்பட்டது. இது போன்ற பாம்புகள் தென்படும் பொழுது, பொதுமக்கள் அதனை அடிக்கவோ, விரட்டவோ கூடாது எனவும், பாம்பு பிடி வீரர்களுக்கு அல்லது வனத்துறை மற்றும் தீயணைப் புத்துறைக்கு உரிய தகவல் தரும் பட்சத்தில், அது பத்திரமாக  மீட்கப்படும் என பாம்புபிடி வீரர் சித்ரன் தெரிவித்துள்ளார்.