கோவை, நவ.25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெள்ளியன்று துவக்கி வைத்தார். நவம்பர் 25 தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் உலக விழிப்புணர்வு நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் அனைத்து பாகுபாடுகளையும் ஒழிக்கும் விதமாக சமூக நலத்துறை மற்றும் தனியார் கல்லூரி மாணவி கள் இணைந்து பேரணியை தொடங்கினர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பதாகைகள் கையில் ஏந்திக்கொண்டு பேரணியில் கலந்து கொண் டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை பகுதி யில் நிறைவடைந்தது. ஈரோடு இதேபோன்று, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதி ரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் சர்வ தேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாந கரின் முக்கிய சாலைகள் வழியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே நிறைவடைந்தது.