districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குக

பொள்ளாச்சி, அக்.18- பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் புதனன்று கறவை  மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடைகளுக்கான தீவனங்கள் பல மடங்கு உயர்ந் துள்ளது. பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி 1  லிட்டர் பசும்பாலுக்கு ரூ.45, எருமை பாலுக்கு ரூ.54 என  அறிவிக்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் புளியம் பட்டி- பல்லடம் சாலையில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, புளியம்பட்டி கிளை தலைவர் கைலாஷ்முருகன், ஸ்டாலின் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.